• Latest News

    August 18, 2015

    பொத்துவிலில் மற்றுமொரு புதிய சிலை - பிரதேச மக்கள் மத்தியில்...?

    அபு அலா –
    பொத்துவில் பகுதியில் பிள்ளையார் சிலையும், புத்தர் சிலையும் திடீரென உருவெடுத்துள்ளதால் அங்கு பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

    நேற்று முன்தினம் (16) ஆம் திகதி இல்லாத இந்த பிள்ளையார் சிலையும், புத்தர் சிலையும் நேற்றிரவு திங்கட்கிழமை (17) எவ்வாறு உருவாக்கம் பெற்றது என முஸ்லிம் மக்களிடத்தில் பாரிய பிரச்சினையை உருவாக்கியுள்ளதால் அங்கு குழப்ப நிலை தோன்றியுள்ளது.

    இவ்வாறு வைக்கப்பட்ட பிள்ளையார் சிலையும், புத்தர் சிலையும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ஆர்.டி.ஏ. காணிக்குள் வைக்கப்பட்டுள்ளது. பல்லாண்டு காலமாக ஒற்றுமைப்பட்டு வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள உறவு நிலை பாதிப்படையாத வகையில் இதற்குரிய தீர்வினை அரசாங்க அதிகாரிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொத்துவிலில் மற்றுமொரு புதிய சிலை - பிரதேச மக்கள் மத்தியில்...? Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top