அரச சேவையில் பணியாற்றும் முறைசாரா மற்றும் தற்காலிக ஊழியர்கள் 35 ஆயிரம் பேர் நிரந்தரமாக்கப்பட உள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான பரிந்துரையை செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் 5000 தபால் சேவை ஊழியர்களுக்கு இடையில் அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் இதனை கூறியுள்ளார்.
முறைசாரா மற்றும் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளனர்.
தபால் திணைக்களத்தில் இப்படியான ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.
நாளாந்த சம்பளம் என்ற அடிப்படையில் பணிப்புரிந்து வரும் இந்த ஊழியர்கள் ஏனைய அரச ஊழியர்கள் அனுபவிக்கும் சிறப்புரிமைகளை அனுபவிப்பதில்லை என்றும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இம்முறை சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் இப்படியான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டதில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான பரிந்துரையை செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் 5000 தபால் சேவை ஊழியர்களுக்கு இடையில் அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் இதனை கூறியுள்ளார்.
முறைசாரா மற்றும் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளனர்.
தபால் திணைக்களத்தில் இப்படியான ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.
நாளாந்த சம்பளம் என்ற அடிப்படையில் பணிப்புரிந்து வரும் இந்த ஊழியர்கள் ஏனைய அரச ஊழியர்கள் அனுபவிக்கும் சிறப்புரிமைகளை அனுபவிப்பதில்லை என்றும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இம்முறை சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் இப்படியான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டதில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment