• Latest News

    December 10, 2017

    105 கோடிக்கு விற்கப்பட்ட கிராமம்

    ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே ஆல்வின் என்ற சிறிய கிராமம் ஏலம் மூலம் ரூ.105 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

    ஹெர்மனியில் பிரான் டர்ன்பார்க் மாநிலத்தில் 'ஆல்வின்' என்ற சிறிய கிராமம் உள்ளது. தனியார் வசம் உள்ள இக்கிராமம் நேற்று ஏலம் மூலம் விற்கப்பட்டது. 

    தொடக்கத்தில் அதை ரூ.85 லட்சத்துக்கு ரியல் எஸ்டேட் உரிமையாளர் கர்குசேன் என்பவர் ஏலம் கேட்டார் பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு முடிவில் அந்த கிராமம் ரூ.105 கோடிக்கு விற்பனை ஆனது.  

    இந்த கிராமத்தில் தற்போது 20 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் அனைவரும் முதியவர்கள். பெரும்பாலான வீடுகள் இடிந்த நிலையில் உள்ளன. இக்கிராமம் தலைநகர் பெர்லினில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது.

    2 ஆக இருந்த ஜெர்மனி கடந்த 1990-ம் ஆண்டு அதாவது 27 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இணைந்தது. முன்பு அது கம்யூனிஸ்டு ஆட்சி நடைபெற்ற கிழக்கு ஜெர்மனியில் இருந்தது. 

    இங்கு ஒரு தொழிற்சாலை இருந்தது. ஜெர்மனி இணைந்ததும் இங்கிருந்தவர்கள் மேற்குஜெர்மனி நகரங்களுக்கு சென்றுவிட்டனர். இதனால் அந்த தொழிற்சாலை மூடப்பட்டது எனவே இந்த கிராமம் மக்கள் நடமாட்டம் இன்றி காலியாகிவிட்டது. 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 105 கோடிக்கு விற்கப்பட்ட கிராமம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top