• Latest News

    November 08, 2019

    தேர்தல் தொடர்பில் றோவுக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்..!!

    கோட்டாபய தோல்வியடைகிறார் றோ மற்றும் புலனாய்வு தகவல்கள் உறுதி செய்துள்ளன.
    இந்திய றோ மற்றும் இலங்கை புலனாய்வு துறையின் பல பிரிவுகள் நடத்திய கருத்து கணிப்பில் அடுத்த இலங்கையின் ஜனாதிபதியாக சஜித் பதவியேற்பார் என தெரிவித்துள்ளன.
    அதனடிப்படையில் சஜித் கோட்டாவை விட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னால் தற்போது நிற்பதாக அறிக்கைகள் கிடைத்துள்ளன.
    அதில் கொழும்பு , கண்டி , நுவரெலியா , மாத்தளை , யாழ்பாணம் , வவுனியா , திருகோணமலை அடங்கலாக 11 மாவட்டங்களில் சஜித் முன்னணியில் உள்ளார்.
    காலி , கழுத்துறை , கம்பஹ , அம்பாந்தோட்டை , மொணராகலை , குருநாகல் , கேகாலை , இரத்தினபுரி உட்பட 13 மாவட்டங்களில் கோட்டாபய முன்னணியில் இருக்கிறார்.
    இருப்பினும் கிடைக்கவிருக்கும் வாக்குகளின் தொகை கணிப்பின்படி சஜித்துக்கே வெற்றி வாய்ப்பு உள்ளது.
    அதேபோல கோட்டா வெல்வார் எனக் கருதப்படும் மாவட்டங்கள் 4கில் சஜித் குறைந்தளவே பின்னணியில் நிற்பதால் இறுதி தருணத்தில் அதிலும் சஜித் அதிக வாக்குகளை பெறலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
    இலங்கையில் உள்ள அமைப்பு ஒன்றின் மூலம் இந்திய றோ அமைப்பு திரட்டிய தகவல் எமக்கு கிடைத்துள்ளது.
    http://www.theevakam.com/archives/205087?fbclid=IwAR0dexlIoWckKXelHD-xTSoyMpt1n99MISspBaXk5Qk3NdsNXUbGVWR2cW8
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தல் தொடர்பில் றோவுக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்..!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top