(எம்.சஹாப்தீன்)
இன்று நாம் பெரிதும் வேதனைக்கு மத்தியில் நமது ஈதுல் பித்ர் தினத்தை அடைந்திருக்கிறோம். சோதனைகளும், வேதனைகளும் எம்மைச் சூழ்ந்திருக்கும் நிலையில் இன்றைய நாளினை மிகவும் கவனமாகவும், கொண்டாட்ட மனவுணர்வுக்கும், செய்றபாட்டிற்கும் அப்பால் நின்று இறை தியானத்தில் கழித்து தக்பீர்களை முழங்கி அல்லாஹ்வை புகழ்ந்து இருப்போம்.
இன்று நாம் பெரிதும் வேதனைக்கு மத்தியில் நமது ஈதுல் பித்ர் தினத்தை அடைந்திருக்கிறோம். சோதனைகளும், வேதனைகளும் எம்மைச் சூழ்ந்திருக்கும் நிலையில் இன்றைய நாளினை மிகவும் கவனமாகவும், கொண்டாட்ட மனவுணர்வுக்கும், செய்றபாட்டிற்கும் அப்பால் நின்று இறை தியானத்தில் கழித்து தக்பீர்களை முழங்கி அல்லாஹ்வை புகழ்ந்து இருப்போம்.
இவ்வாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளரும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ரி.ஹஸன்அலி தமது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை முஸ்லிம்கள் இன்று கோவிட் 19 அச்சுறுத்தில் குறித்து சிந்திப்பதை விடவும், நமது நாட்டில் எமது இருப்புக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்கள் குறித்து சிந்திக்காது இன்று வாழும் நமது பிற்போக்குத்தனமானது எதிர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த மக்கள் என்ற வரலாற்றை எழுதிவிடுவதற்கு வழியமைத்து கொடுத்து விடலாம்.
உண்மையில் நமது இருப்பியலின் உறுதித் தன்மையை நிலைபேறாக்கி வைப்பதற்கு தேவையான முஸ்லிம் தேசம் பற்றி சிந்திப்பதற்கும், அதற்கான அரசியல் கட்டமைப்பு குறித்தும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இதனை உணர தலைப்படாதவர்களாக நாமின்று வாழ்ந்துவிட்டு சென்றால், நமது எதிர்கால சந்ததிகள் மிகுந்த உக்கிரமான அடக்கு முறைமைக்குள் அகப்பட்டு அழிந்துவிடும்.
இது காலவரை நாம் இணக்க அரசியல் செயற்பாட்டில் மிகுந்த நம்பிக்கையோடு ஒன்றிணைந்து வாழ்ந்து வந்திருக்கின்றோம். இதன் ஊடாக நாமும், நமது சமூகமும் உரிய பயன்பாட்டை அடைந்து கொள்வதிலிருந்து தவறி இருக்கிறோம்.
இணக்க அரசியல் இன்னுமின்னும் கட்டுண்டு நிற்காது. நமது தேசத்தை நிறுவுவது பற்றிய சிந்தனையிலும், அதன் செயற்பாட்டிலும் தொடர்ந்து பயணிப்பதற்கு கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களும் முஸ்லிம் தேசியம் என்கின்ற ஒற்றை இலக்கை நோக்கி திரட்சியடைந்து வெற்றி பெறுவதற்கு திடசங்கற்பம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தாடலை இன்றைய எனது பெருநாள் வாழ்த்தாகவும், சிந்தனையாகவும் முன் வைக்கின்றேன்.


0 comments:
Post a Comment