இலங்கையில் முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையிலான
கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம்
சுமத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுகை தொடர்பில் சில அரசாங்க
அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பகிரங்கமாக
கருத்துக்களை வெளியிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா வைரஸ்
தொற்று தொடர்பில் உலகம் முழுவதிலும் இனவாத அடிப்படையிலான ஒடுக்குமுறைகள்
எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறித்து குறித்து அறிக்கை ஒன்றை
மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுகையை
அடிப்படையாக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான குரோதப் பேச்சுக்கள்
அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று
பரவுகையின் பிரதான காவிகளாக முஸ்லிம்கள் இருப்பதாக குற்றம் சுமத்தி அந்த
சமூகம் மீது களங்கம் கற்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா
வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் உடலை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டிய
அவசியமில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த
முஸ்லிம்களின் உடலை தகனம் செய்வது குறித்து முகநூலில் பதிவிட்ட ரம்ஸீ
ராசீக் என்பவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அது குறித்து
முறைப்பாடு செய்ய சென்ற போது அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும்
மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments:
Post a Comment