• Latest News

    July 03, 2021

    ஊடகவியலாளருக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் : ஊடக அமைப்புக்கள் கண்டனம்

     (எம்.மனோசித்ரா)
    ஊடகவியலாளர் ஒருவர் முகப்புத்தகம் ஊடாக பகிர்ந்த செய்தியொன்று தொடர்பில், கருத்து பதிவிட்டு மேல் மாகாண  சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குறித்த ஊடகவியலாளருக்கு விடுத்துள்ள மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன.

    சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுடைய மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு குறித்த  ஊடக அமைப்புக்கள் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளன.
    Virakesari -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஊடகவியலாளருக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் : ஊடக அமைப்புக்கள் கண்டனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top