காரைதீவு பிரதேசத்திலமைந்துள்ள வளைந்த வட்டை மேல் கண்டத்தில் விஷ்ணு கோயில் காணியில் நெல் அறுவடை (11 ஏக்கர்) செய்து வாகனத்தில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த (சுமார் 400 மூடைகளுக்கதிகமான ) நிலையில் மிக அதிகளவான யானைகள் அத்து மீறி அனைத்தையும் நாசம் செய்துள்ளன.
அம்பாரை மாவட்டத்தில் கரையோர பிரதேசத்தில் வேளாண்மை அறுவடை முற்றாக நிறைவடையாத நிலையில் காட்டு யானைகளின் அட்டகாசம் நீடித்துக் கொண்டிருக்கின்றது. விவசாயிகள் அறுவடையில் ஈடுபடுவதற்கு அச்சமடைந்துள்ளனர். வனவிலங்கு திணைக்களம் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.





0 comments:
Post a Comment