வடக்கில் பெற்றுக்கொண்ட யுத்த வெற்றிக்கு பலரும் உரிமை கொண்டாடினர். எனினும்இ வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவத்தின்போது துப்பாக்கிப் பிரயோகத்துக்கான உத்தரவு பிறப்பித்தமைக்கான உரிமை இதுவரையில் எவராலும் கோரப்படவில்லை என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான விஜித ஹேரத் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெலிவேரிய சம்பவமானது வடக்கில் என்ன இடம்பெற்றிருக்கும் என்பதை இலங்கை வரவிருக்கும் மனித உரிமைகளுக்கான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு பிரதிபலித்துக் காட்டிவிட்டதாகவும் அவர்கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஐக்கியதேசியக் கட்சியின் ஜோன் அமரதுங்க எம்.பி.யினால் கொண்டுவரப்பட்ட வெலிவேரிய சம்பவம் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
விஜித ஹேரத் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாடடுகள் முன்வைக்கப்படுவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே பிரதான காரணமாகும்.
வெலிவேரிய ரத்துபஸ்வல மக்கள் தமக்கு சுத்தமான குடிநீரையே பெற்றுத் தருமாறு கேட்டனர். ஆனால்இ நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக அந்த மக்களுக்கு துப்பாக்கிச் சூடுதான் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவமானது வடக்கில் என்ன இடம்பெற்றிருக்கும் என்பதை பிரதிபலிப்பதாய் அமைந்திருக்கின்றது.அது மாத்திரமின்றி வெலிவேரிய சம்பவத்தினூடாக ஒட்டுமொத்த விடயங்களையும் குறித்த அறிக்கையை நவநீதம்பிள்ளை தயாரிக்கக்கூடியதாய் அமைந்துவிட்டது.
வடக்கில் பெற்றுக்கொள்ளப்பட்ட யுத்த வெற்றிக்கு பலரும் உரிமை கொண்டாடினர்.ஆனால்இ ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கு உத்தரவிட்டவர் யார் என்ற உரிமை இன்றுவரையில் எவராலும் கோரப்படவில்லை.
மக்களைக் காப்பதாக தலைமை கூறுகின்றது.அப்படியெனில் ரத்துபஸ்வல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோதே அந்த தலைமை எங்கே சென்றிருந்தது எனக் கேட்கிறேன்.
இது ஒருபுறமிருக்கஇ- கிராண்ட்பாஸ் சம்பவமும் இது போன்றே இடம்பெற்றுள்ளது.அஙகும் அசாதாரண நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
இத்தகைய சம்பவங்களையும் அதன் பின்னணியையும் எதிர்க்கட்சிகள் சென்று எங்கும் கூறத் தேவையில்லை.ஆளும் கட்சியில் உள்ளவர்களே அதாவது அரசாங்கமே இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது.அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசாங் கமே காரணமாகியிருக்கின்றது.
இந்நிலையில் தண்ணீர் கேட்டு போராடிய ரத்துபஸ்வல மக்களின் கோரிக்கையை நியாயபூர்வமாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
வெலிவேரிய சம்பவமானது வடக்கில் என்ன இடம்பெற்றிருக்கும் என்பதை இலங்கை வரவிருக்கும் மனித உரிமைகளுக்கான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளைக்கு பிரதிபலித்துக் காட்டிவிட்டதாகவும் அவர்கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஐக்கியதேசியக் கட்சியின் ஜோன் அமரதுங்க எம்.பி.யினால் கொண்டுவரப்பட்ட வெலிவேரிய சம்பவம் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
விஜித ஹேரத் எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றச்சாடடுகள் முன்வைக்கப்படுவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே பிரதான காரணமாகும்.
வெலிவேரிய ரத்துபஸ்வல மக்கள் தமக்கு சுத்தமான குடிநீரையே பெற்றுத் தருமாறு கேட்டனர். ஆனால்இ நீரைப் பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக அந்த மக்களுக்கு துப்பாக்கிச் சூடுதான் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
வெலிவேரியவில் இடம்பெற்ற சம்பவமானது வடக்கில் என்ன இடம்பெற்றிருக்கும் என்பதை பிரதிபலிப்பதாய் அமைந்திருக்கின்றது.அது மாத்திரமின்றி வெலிவேரிய சம்பவத்தினூடாக ஒட்டுமொத்த விடயங்களையும் குறித்த அறிக்கையை நவநீதம்பிள்ளை தயாரிக்கக்கூடியதாய் அமைந்துவிட்டது.
வடக்கில் பெற்றுக்கொள்ளப்பட்ட யுத்த வெற்றிக்கு பலரும் உரிமை கொண்டாடினர்.ஆனால்இ ரத்துபஸ்வலயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கு உத்தரவிட்டவர் யார் என்ற உரிமை இன்றுவரையில் எவராலும் கோரப்படவில்லை.
மக்களைக் காப்பதாக தலைமை கூறுகின்றது.அப்படியெனில் ரத்துபஸ்வல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோதே அந்த தலைமை எங்கே சென்றிருந்தது எனக் கேட்கிறேன்.
இது ஒருபுறமிருக்கஇ- கிராண்ட்பாஸ் சம்பவமும் இது போன்றே இடம்பெற்றுள்ளது.அஙகும் அசாதாரண நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டிருந்ததைக் காண முடிந்தது.
இத்தகைய சம்பவங்களையும் அதன் பின்னணியையும் எதிர்க்கட்சிகள் சென்று எங்கும் கூறத் தேவையில்லை.ஆளும் கட்சியில் உள்ளவர்களே அதாவது அரசாங்கமே இதனை வெளிப்படுத்தி நிற்கின்றது.அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசாங் கமே காரணமாகியிருக்கின்றது.
இந்நிலையில் தண்ணீர் கேட்டு போராடிய ரத்துபஸ்வல மக்களின் கோரிக்கையை நியாயபூர்வமாக அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

0 comments:
Post a Comment