• Latest News

    August 22, 2013

    முஸ்லிம் கடும்போக்குவாதிகள் அல்லது எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தினர் இணைந்து தமிழகத்திற்கு தாக்குதலை மேற்கொள்வதற்கான சூழ்நிலை இலங்கையில் இல்லை - இராணுவப் பேச்சாளர்

    கொழும்பு-
    பாகிஸ்தானில் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் இலங்கையூடாக இந்தியாவின் தமிழகம் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாராவதாக இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளதாக சன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

    எனினும் இதுவொரு கற்பனை மாத்திரமே என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்

    முஸ்லிம் கடும்போக்குவாதிகள் அல்லது விடுதலைப் புலி இயக்கத்தினர் இணைந்து தமிழகத்தில் தாக்குதலை மேற்கொள்வதற்கான சூழ்நிலை இலங்கையில் இல்லைஇ குறிப்பாக இன்று விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தற்போது எங்கும் செயற்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



    இந்த அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டதனை அடுத்து தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் நேற்று இராமேஸ்வரத்தில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன

    மகாராஸ்திர மாநில பொலிஸாருக்கு கடந்த வாரம் உளவுத் துறை அனுப்பிய கடிதத்தில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற எட்டு தீவிரவாதிகள் தென் இந்தியாவைத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக சன் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எட்டு தீவிரவாதிகளும் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்துஇ இலங்கை மீனவர்களின் உதவியுடன்இ தமிழகத்திற்குள் ஊடுறுவி மயிலாடுதுறை அல்லது மதுரையை தாக்கக் கூடும் என்றும் அந்தக் கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இராமேஸ்வரத்தில் உள்ள விடுதிகளில்இ நேற்றிரவு தீவிர சோதனை மேற்கொண்ட பொலிஸார்இ வாகனங்களையும் சோதனையிட்டனர்.

     பிரிகேடியர் ருவன் வணிகசூரிய
    ''இந்த செய்தி எவராவது ஒருவருடைய கற்பனையாக இருக்க முடியுமே தவிர உண்மையாக முடியா. இன்று யாழ்பாணம்இ வன்னிஇ கிழக்கு ஆகிய பகுதிகளில் மாத்திரமல்ல நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நிலவுகின்ற நிலைமைத் தொடர்பில் போதியளவு தெளிவு இருக்கின்ற எந்த ஒருவரும் இவ்வாறான தகவலை வெளியிட மாட்டார்கள்.குறிப்பாக புலனாய்வு தகவல்கள் அல்ல ஆகக்குறைந்தது இதுபோன்ற விடயங்களை நாவல்களாக கூட எழுத மாட்டார்கள் முஸ்லிம் கடும்போக்குவாதிகள் அல்லது எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தினர் இணைந்து தமிழகத்திற்கு தாக்குதலை மேற்கொள்வதற்கான சூழ்நிலை இலங்கையில் இல்லை.குறிப்பாக இன்று எல்.ரீ.ரீ.ஈ இயக்கம் ஆயுதங்களுடன் தற்போது எங்கும் செயற்படுவதில்லை.அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் தற்போது புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.எனவே எந்த ஆயுதக்குழுக்களும் இலங்கையில் இல்லைஇஅதேபோன்று முஸ்லிம் கடும்போக்குவாத குழுக்களும் இலங்கையில் செயற்படுவதில்லை.அவர்கள் கூறும் விதத்தில் பயிற்சி முகாம்களோ அல்லது திட்டமிட்ட முறையில் தாக்குதல் மேற்கொள்வதற்கு ஏற்றவகையிலான இடங்களோ கிழக்கு பகுதியில் இல்லை.அனைத்து பகுதிகளிலும் இராணுவம் கடற்படை அல்லது விமானப் படை பாதுகாப்பு கடமைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம்.எனினும் ஏதாவது ஒரு நோக்கில் மக்களை அச்சுறுத்தும் நோக்கில் இவ்வாறான விடயங்களை கூற முடியும் எனினும் தாம் அதனை நிராகரிக்கின்றோம்.புலனாய்வு பிரிவினால் கிடைத்த தகவல் என கூறும் விடயத்தை முற்றாக நிராகரிக்கின்றோம்''.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் கடும்போக்குவாதிகள் அல்லது எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தினர் இணைந்து தமிழகத்திற்கு தாக்குதலை மேற்கொள்வதற்கான சூழ்நிலை இலங்கையில் இல்லை - இராணுவப் பேச்சாளர் Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top