ஏஎம்பி;
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடனான ஒன்றுகூடல் 01.01.2014 இரவு 07 மணி முதல் 11 மணிவரை மாளிகைக்காடு பிஸ்மில்லா ரெஸ்டூரண்டில் இடம்பெற்றது.
திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடனான ஒன்றுகூடல் 01.01.2014 இரவு 07 மணி முதல் 11 மணிவரை மாளிகைக்காடு பிஸ்மில்லா ரெஸ்டூரண்டில் இடம்பெற்றது.
ஒரு அரசியல்வாதி பேசிக்கொண்டு செல்ல அங்கு வருகைதந்திருக்கும் ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரும் அவ்வரசியல்வாதியிடம் கேள்விகளைக் கேட்கும் வழமையான முறை இங்கு மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அதாவது, அரசியலுக்கு உறுதுணையாக இருக்கும் ஊடகவியலாளர்கள் தமது மனக்கிடக்கைகளில் புதைந்திருக்கும் மன அழுத்தங்களை போக்கிக் கொள்வதற்கான களமாக இவ்வூடகவியளாளர் ஒன்றுகூடல் அமைந்திருந்தது. நாகூர் ஹனிபா புகழ் மருதமுனை கமால் இனிமையான பாடல்களை பாடினார். இவ்வொன்றுகூடல் முழுக்க முழுக்க வித்தியாசமானதாக அமைந்திருந்த்தனால் அனைத்து ஊடகவியலாளர்களையும் வெகுவாக ஈர்த்துக் கொண்டது.
சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் முதல் ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் தமது ஊடக வாழ்வில் தாம் அனுபவித்த சுவாரஷ்யமான அனுபவங்களை சக ஊடகவியலாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அத்தோடு ஊடகவியலாளர்கள் தாமாக முன்வந்து பாடல்களை பாடியும் கவிகளையும் பொழிந்தும் நிகழ்விற்கு மேலும் மெருகூட்டினர்.
நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்திக்குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இலங்கை மற்றும் சர்வதேசத்தில் நடந்த அரசியல் வரலாற்று உண்மைகள் சம்பவங்கள் தொடர்பாக பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் என்றும், குறிப்பாக இலங்கையில் தேசிய இனப்போராட்ட காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் அதிலும் எமது பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களுடைய அரசியல் வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள், மேலும், தற்காலத்தில் இடம்பெறுகின்ற அரசியல் காய்நகர்த்தல்கள் குறிப்பாக தேசிய அரசியல் தலைமைகளின் அரசியல் வியூகங்கள் மற்றும் காய்நகர்த்தல்கள் சம்பந்தமாக 'அரசியலில் யுகம் கண்ட உண்மைகள்' எனும் தலைப்பில் நானும் ஊடகவியலாளராக என்னை மற்றிக்கொள்ளப் போவதாகவும் அதற்கு ஊடகவியலாளர்கள் தமது அனைத்து ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

0 comments:
Post a Comment