எதிர்வரும்
பொதுத் தேர்தல் 2014ம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலின்
அடிப்படையில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதேநேரம் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை வினவி,
சகல பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் கடிதங்கள் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன. குறித்த கட்சிகள் தனித்தோ, அல்லது கூட்டாகவோ தேர்தலில்
போட்டியிடும் முறை குறித்து தேர்தல் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும்
என்று ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையில் பதவியில் …
தேர்தல் சுயாதீன ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையில் தாம் தமது பதவியில்
தொடரவிருப்பதாக, தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய
தெரிவித்துள்ளார்.ஓய்வூதிய கொடுப்பனவும் திணைக்களத்துக்கு சமுகமளித்திருந்த
போது அவர் இந்த விடயத்தை கூறினார்.
தேர்தல் ஆணையாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான ஆவணங்களை அவர்
இதன் போது கையளித்திருந்தார்.எனினும் புதிய ஆணைக்குழு உருவாக்கப்படும்
வரையில் தாம் இந்த பணியில் தொடரவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment