மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்கள் கற்றுத்தந்த கொள்கையின் அடிப்படையில் தான் நான் இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.
மு.கா. யில் இருந்து என்னை யாராலும்
விலக்கமுடியாது. இதிலிருந்து தான் மரணிப்பேன். மு.காங்கிரசின் அனைத்துப்
பதவிகளிலிருந்தும் ராஜினாமாச் செய்து விட்டு சாதாரண அங்கத்தவராக இருப்பதே
எனது இன்றைய நிலைப்பாடாகும்.
என மு.கா. செயலாளர் நாயகம் எம். ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் தளம் நியூஸ்க்கு கருத்து தெரிவிக்கையில்,
வற்புறுத்தலுக்கு அமைவாக மு.கா. தலைவர்
ஹக்கீம் யானைச் சின்னத்தில் கண்டியில் போட்டியிட வேண்டும் என்ற தனிப்பட்ட
காரணத்தால் தனித்துவம் இழந்து யானைச் சின்னத்தில் போட்டியிட காரணமாக
அமைந்தது.
அதனால் தான் திருகோணமலை மற்றும் ஏனைய
மாவட்டங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டதாகவும் மு.கா. செயலாளர்
நாயகம் எம். ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். நான் தான் முழு அமைச்சராக இருக்க
வேண்டும் என்று 16 வருடங்களாக இருந்து வருகின்றார்.

0 comments:
Post a Comment