சத்தார் எம் ஜாவித் -
முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடரும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அமைதியாகவே வாழ விரும்புகின்றனர்.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் அமைதியாகவே வாழ விரும்புகின்றனர்.
அவர்கள் எந்தவித பிரிவினைக்கோ அல்லது வன்முறைக்கோ செல்வதை அல்லது
அவற்றில் ஈடுபடுவதற்கு விரும்புவதில்லை. மாறாக அவர்கள் தாமும் தமது
மார்க்கமும் என்ற கொள்கையில் இருக்கின்றனர்.
ஆனால் இன்று இலங்கையில் அமைதியாக வாழும் முஸ்லிம் சமுகத்தினை வன்முறையாளர்களாக சித்திரித்து இந்த நாட்டில் மீண்டுமொரு இரத்தக் களரியை ஏற்படுத்துவதற்கான ஓர் அங்கமாகவே பொதுபல சேனா தொடர்ந்தும் முஸ்லிம்கள் விடயத்தில் அவர்களின் சமய சமூக விடயங்களில் முட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்தினையும், மக்களையும் பொய்யான தகவல்களைக் கொடுத்துக் கொண்டு இந்த நாட்டின் அமைதிக்கும், சமாதானத்திற்கும் குந்தகமாக அச்சுறுத்திக் கொண்டு இருந்து வருகின்றமை விசனத்திற்குரிய விடயமாகவும், கவலை தரும் விடயமாகவும் காணப்படுகின்றது.
அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் பல தடவைகள் ஐ.எஸ்.ஐ.எஸ். இலங்கையில் இல்லை அதுபற்றிய அச்சமும் தேவையில்லை என்று அறிவந்திருக்கின்ற வேளையில் இவர்கள் அதனை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருப்பது இந்த நாட்டில் அவர்கள் முஸ்லிம்களை வெறுக்க நினைக்கும் விடயமாகவே நோக்க வேண்டியுள்ளது.
இவர்கள் விடயத்தில் குறிப்பாக முஸ்லிம்கள் மீது அபாண்டம் கூறுவதை அரசு உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அரசு இனவாதத்திற்கும், சமய நிந்தனைகளுக்கும் இடமில்லை என்று கூறும் போது பொதுபல சேனாவின் தீய செயற்பாடுகள் விடயத்தில் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அது எதிர் காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்பதுடன் அது வன்முறைக்கும் வித்திடும் என்ற கவலையை முஸ்லிம் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
பௌத்தர் என்று கூறிக் கொண்டும், தேரர்கள் என்றும் கூறிக் கொண்டும் இவர்கள் ஏனைய சமூகங்கள் மீது நடந்து கொள்ளும் மிகமோசமான கொள்கையுடையவர்களாக இருப்பது முழு பௌத்த சமுகத்தினையும் வெட்கித் தலை குனிய வைத்துள்ளது.
பொதுபல சேனா ஏனைய சமூகங்களை விமர்சின்கின்றோம் என கூறிக் கொண்டு தமது பௌத்த தர்மத்தினையே கொச்சைப்படுத்தி ஏனைய சமூகங்கள் மத்தியில் தமது சமயத்தின் கௌரவத்தினையும், நன்மதிப்பையும் இல்லாமல் செய்வதனையே காணக் கூடியதாகவுள்ளது.
பௌத்த தர்மத்தினை பொதுபல சேனாவின் தீய செயற்பாடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய தேவை அனைத்து பௌத்த மாகா சங்கங்களுக்கும் உள்ளது.
இதனை அவர்கள் செய்யா விட்டால் பௌத்த தர்மத்தின் சகல நம்பிக்கைகளும் ஏனைய சமூகங்களில் இருந்து அகற்றப்படுவதற்கான நிலைமைகளே பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதை ஏனைய சமுகங்கள் காண்டு கொண்டிருக்கின்றன.
நாட்டில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டும் அபாயத்திற்கும் இட்டுச் சென்று கொண்டிருக்கின்ற வறுமை நிலைமைகள், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், போதைப் பொருள் பாவனைகள், அதன் விற்பனைகள், மதுபானப் பாவனைகள், கொள்ளைகள் போன்ற விடயங்களை கட்டுப்படுத்தி மக்களை அந்த அழிவுகளில் இருந்து காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்புக்களும், தேவைகளும் இருக்கின்ற தற்கால சூழ்நிலையில் அவற்றைச் செய்யாது முஸ்லிம் சமுகத்தினை அழிக்கும் முனைப்பில் செயற்படுவது அவர்கள் தமது சமயத்திற்கு செய்யும் பாரிய துரோகமாகவே காணக் கூடியதாகவுள்ளது.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்த நாட்டில் தீய சக்திகளால் சிறுபான்மைச் சமுகங்கள் தாக்கப்படும் செயற்பாடுகளை உடன் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதன் செயற்பாடுகளில் ஈடுபடும் சகலரையும் பாகுபாடற்ற வகையில் கைது செய்து தண்டனை வழங்கி நாட்டில் அச்சத்தைப் போக்கி ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என வும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே தற்போதைய நிலையில் இந்த தேசிய நல்லிணக்க அரசின் சகல நல்ல செயற்பாடுகளையும் மழுங்கடிக்கச் செய்யும் இவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான முறையில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ஆனால் இன்று இலங்கையில் அமைதியாக வாழும் முஸ்லிம் சமுகத்தினை வன்முறையாளர்களாக சித்திரித்து இந்த நாட்டில் மீண்டுமொரு இரத்தக் களரியை ஏற்படுத்துவதற்கான ஓர் அங்கமாகவே பொதுபல சேனா தொடர்ந்தும் முஸ்லிம்கள் விடயத்தில் அவர்களின் சமய சமூக விடயங்களில் முட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் இருப்பதாகவும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கத்தினையும், மக்களையும் பொய்யான தகவல்களைக் கொடுத்துக் கொண்டு இந்த நாட்டின் அமைதிக்கும், சமாதானத்திற்கும் குந்தகமாக அச்சுறுத்திக் கொண்டு இருந்து வருகின்றமை விசனத்திற்குரிய விடயமாகவும், கவலை தரும் விடயமாகவும் காணப்படுகின்றது.
அரசாங்கமும், பாதுகாப்புத் தரப்பினரும் பல தடவைகள் ஐ.எஸ்.ஐ.எஸ். இலங்கையில் இல்லை அதுபற்றிய அச்சமும் தேவையில்லை என்று அறிவந்திருக்கின்ற வேளையில் இவர்கள் அதனை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருப்பது இந்த நாட்டில் அவர்கள் முஸ்லிம்களை வெறுக்க நினைக்கும் விடயமாகவே நோக்க வேண்டியுள்ளது.
இவர்கள் விடயத்தில் குறிப்பாக முஸ்லிம்கள் மீது அபாண்டம் கூறுவதை அரசு உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அரசு இனவாதத்திற்கும், சமய நிந்தனைகளுக்கும் இடமில்லை என்று கூறும் போது பொதுபல சேனாவின் தீய செயற்பாடுகள் விடயத்தில் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அது எதிர் காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்பதுடன் அது வன்முறைக்கும் வித்திடும் என்ற கவலையை முஸ்லிம் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
பௌத்தர் என்று கூறிக் கொண்டும், தேரர்கள் என்றும் கூறிக் கொண்டும் இவர்கள் ஏனைய சமூகங்கள் மீது நடந்து கொள்ளும் மிகமோசமான கொள்கையுடையவர்களாக இருப்பது முழு பௌத்த சமுகத்தினையும் வெட்கித் தலை குனிய வைத்துள்ளது.
பொதுபல சேனா ஏனைய சமூகங்களை விமர்சின்கின்றோம் என கூறிக் கொண்டு தமது பௌத்த தர்மத்தினையே கொச்சைப்படுத்தி ஏனைய சமூகங்கள் மத்தியில் தமது சமயத்தின் கௌரவத்தினையும், நன்மதிப்பையும் இல்லாமல் செய்வதனையே காணக் கூடியதாகவுள்ளது.
பௌத்த தர்மத்தினை பொதுபல சேனாவின் தீய செயற்பாடுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாய தேவை அனைத்து பௌத்த மாகா சங்கங்களுக்கும் உள்ளது.
இதனை அவர்கள் செய்யா விட்டால் பௌத்த தர்மத்தின் சகல நம்பிக்கைகளும் ஏனைய சமூகங்களில் இருந்து அகற்றப்படுவதற்கான நிலைமைகளே பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதை ஏனைய சமுகங்கள் காண்டு கொண்டிருக்கின்றன.
நாட்டில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டும் அபாயத்திற்கும் இட்டுச் சென்று கொண்டிருக்கின்ற வறுமை நிலைமைகள், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், போதைப் பொருள் பாவனைகள், அதன் விற்பனைகள், மதுபானப் பாவனைகள், கொள்ளைகள் போன்ற விடயங்களை கட்டுப்படுத்தி மக்களை அந்த அழிவுகளில் இருந்து காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்புக்களும், தேவைகளும் இருக்கின்ற தற்கால சூழ்நிலையில் அவற்றைச் செய்யாது முஸ்லிம் சமுகத்தினை அழிக்கும் முனைப்பில் செயற்படுவது அவர்கள் தமது சமயத்திற்கு செய்யும் பாரிய துரோகமாகவே காணக் கூடியதாகவுள்ளது.
பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இந்த நாட்டில் தீய சக்திகளால் சிறுபான்மைச் சமுகங்கள் தாக்கப்படும் செயற்பாடுகளை உடன் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதன் செயற்பாடுகளில் ஈடுபடும் சகலரையும் பாகுபாடற்ற வகையில் கைது செய்து தண்டனை வழங்கி நாட்டில் அச்சத்தைப் போக்கி ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும் என வும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எனவே தற்போதைய நிலையில் இந்த தேசிய நல்லிணக்க அரசின் சகல நல்ல செயற்பாடுகளையும் மழுங்கடிக்கச் செய்யும் இவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான முறையில் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

0 comments:
Post a Comment