• Latest News

    July 30, 2016

    முப்­பது பேருக்கு மேற்­பட்­டோரால் பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ள 13 வயது சிறுமி - மாத்தறை பகுதியில் சம்பவம்; ஹோட்டல் முகாமையாளர் உட்பட 12 பேர் கைது

    மாத்­தறை பிட்­ட­பத்­தர பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட பின்தங்­கிய கிராமம் ஒன் றினைச் சேர்ந்த 13 வய­து­டைய பாட ­சாலை சிறுமி ஒரு­வரை கூட்­டா­கவும் தனித்­த­னி­யா­கவும் பாலியல் பலாத்­கா­ரத்­துக்குட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் 30 இற்கும் மேற்­பட்ட சந்­தேகநபர்­களைத் தேடி மாத்­தறைப் பிராந்­திய சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார விசா­ரணைப் பிரிவு பொலிஸார் வலை விரித்துள்ளனர். பிட்­ட­பத்­தர பொலி­ஸா­ருக்கு கிடைத்த முறைப்­பா­டொன்­றுக்கு அமை­வாக அதன் மேலதிக விசா­ர­ணை­களை மாத்­தறை பிராந்­திய சிறுவர் மகளிர் விவ­கார விசா­ரணைப் பிரிவின் சிறப்புக் குழு­வொன்று ஆரம்­பித்­துள்ள நிலை­யி­லேயே, இச்­சம்ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­தாகக் கூறப்­படும் அக்­கு­ரஸ்ஸ பிராந்­தி­யத்தின் சுற்­றுலா ஹோட்டல் ஒன்றின் உரி­மை­யாளர், மூன்று ஹோட்டல் முகா­மை­யா­ளர்கள், ஒரு பெண்

    உட்­பட 12 பேரை இது­வரைக் கைது செய்­துள்­ள­தாக தென் பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.
    இவர்­களில் ஐவரை மாத்­தறை சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார விசா­ரணைப் பிரிவும் 7 பேரை பிட்­ட­பத்­தர பொலி­ஸாரும் கைது செய்­த­தா­கவும் கைதா­னோரை விளக்­க­ ம­றி­யலில் வைத்து மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் அந்த அதி­காரி மேலும் தெரி­வித்தார்.
    பிட்­ட­பத்­தர பகு­தியின் பின் தங்­கிய கிராமப் புற பாட­சாலை ஒன்றில் கல்வி பயின்று வரும் குறித்த சிறு­மியை பல்­வேறு சந்­தர்ப்­பங்களில் கூட்­டா­கவும் தனித்­த­னி­யா­கவும் சுமார் 30 இற்கும் மேற்­பட்ட சந்­தேக நபர்கள் பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர். அவர்­களில் 20 பேர் இது­வரை விசா­ர­ணையில் அடை­யாளம் காணப்பட்­டுள்ள நிலையில் ஏனையோரையும் அடை­யாளம் காணப்பட்­டோ­ரையும் கைது செய்யும் நட­வ­டிக்­கைகள் முடுக்கி விடப்பட்­டுள்­ளன.
    பாதிக்­கப்பட்ட சிறுமி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்டு சிகிச்­சை­ய­ளிக்­கப்பட்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்­பி­லான முழு­மை­யான விசா­ர­ணைகள் மாத்­தறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதி­ரி­சிங்­கவின் நேரடி கட்­டுப்­பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஜி.எச். மாரப்­ப­னவின் மேற்­பார்­வையில் மாத்­தறை சிறுவர், மகளிர் விவ­கார விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி வருணி போக­ஹ­வத்­தவின் கீழான சிறப்புக் குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளது.
    இந் நிலையில் நேற்று வரை 12 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்பட்­டுள்ள நிலையில் அவர்­களில் ஒரு பெண்ணும் அடங்­கு­வ­த­ாகவும் குறித்த பெண் அவ­ரது கண­வ­ருக்கு இந்த சிறு­மியை பலாத்­காரம் செய்ய ஒத்­து­ழைப்பு வழங்­கி­யுள்­ள­தாகவும் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­து என்று விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்பான பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
    இந் நிலையில் நேற்று முன் தினம் மாத்­தறை பிராந்­தி­யத்தின் 6 ஹோட்­டல்கள் மீது பொலிஸார் சோதனை நடத்­தி­ய­தா­கவும் இதன் போது சம்ப­வத்­துடன் தொடர்­பு­டைய அக்குரஸ்ஸ பிராந்தியத்தின் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர் உட்பட ஹோட்டல் முகாமையாளர்கள் மூவரையும் மேலும் ஒருவரையும் கைது செய்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
    இந் நிலையிலேயே குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்தோரை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர். 
    Thanks: Virakesari 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முப்­பது பேருக்கு மேற்­பட்­டோரால் பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்­டுள்ள 13 வயது சிறுமி - மாத்தறை பகுதியில் சம்பவம்; ஹோட்டல் முகாமையாளர் உட்பட 12 பேர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top