• Latest News

    July 30, 2016

    ஐ.நா. மனித உரிமை பேரவை அரசாங்கத்திற்கு வற்புறுத்தல், அழுத்தங்கள் கொடுக்கவில்லை சட்டமும் நீதியும் ஒழுங்காக பின்பற்றப்படுவதே காரணம்; மூதூரில் ஜனாதிபதி




    ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை இலங்கை அர­சாங்­கத்­திற்கு வற்­பு­றுத்­தலோ அழுத்­தங்­களோ கொடுக்­க­வில்லை. இலங்கை அர­சாங்கம் அடிப்­படை மனித உரி­மை­க­ளையும் சட்­டத்­தை­யும் நீதி­யையும் ஒழுங்­காக பின்­பற்­று­வதால் தான் இத்தகைய அழுத்தங்கள் ஏற்படவில்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.
    மூதூர் மாவட்ட மற்றும் நீதி­வான் நீதி­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று பங்­கேற்று உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்,
    அவர் மேலும் தெரி­விக்­கையில்,
    ஐக்­கிய நாடுகள் சபை மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் என்­னுடன் பேசு­கின்றபோதெல்லாம் அடிப்­படை மனித உரி­மைகள் மற்றும் நீதி ஒழுக்கம் உள்­ளிட்ட விட­யங்­களை சிறந்த முறையில் பின்­பற்றும் நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்று அவர் குறிப்­பி­டுவார்.
    இலங்­கையை பொறுத்­த­மட்டில் என்­னு­டைய ஆட்­சிக்­கா­லத்தில் அடிப்­படை மனித உரிமை ,நீதி ஒழுங்கு ,இன மத வேறு­பாடு அற்ற முறையில் பின்­பற்­றப்­பட வேண்டும் என நான் உறுதி கொண்­டுள்ளேன். அதே­நேரம் தற்­போது புதி­தாக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள அர­சியல் சாச­னத்­திலும் மனித உரி­மைகள் மற்றும் நீதி ஒழுக்கம் உள்­ளிட்ட விட­யங்­களை உறு­திப்­ப­டுத்­தினோம். இலங்­கைவாழ் மக்கள் நல்ல­தொரு சமு­தா­ய­மாக மாற நீதிக்­கட்­ட­மைப்பே அடிப்­ப­டை­யாக அமையும்.
    அதற்கு நீதிச் சேவை­களும் உயர்ந்த மட்­டத்தில் இருக்க வேண்டும். அதே­நேரம் நல்ல மனி­தர்கள் உரு­வாக வேண்டும் என்றால் கல்விச் சேவையும் சிறந்த முறை­யி­லி­ருக்க வேண்டும். அப்­போது தான் சிறந்த குண­மு­டை­ய­வர்­க­ளையும் புத்­தி­ஜீவி­க­ளையும் நாம் உரு­வாக்க முடியும்.
    சட்டம் மக்­க­ளுக்கு நல்­லு­த­வி­களை வழங்கி உறு­து­ணை­யா­கவும் இருக்கும். உலகின் பல நாடு­க­ளிலும் மக்­களின் வாழ்க்கைத் தரங்கள் பல்­வேறு வித­மா­க இ­ருந்த போதும் அரச மற்றும் அர­சார்­பற்ற நிறு­வ­னங்கள் அவர்­களை நெறிப்­ப­டுத்­து­மாயின் நல்­லாட்சி மலரும். அதனை உரு­வாக்­கவே நாமும் பாடு­ப­டு­கின்றோம்.
    நியாயமான சட்­டங்கள் பார­பட்சம் இன்றியும் நடை­மு­றைப்­ப­டுத்­த­ப்படும் போது மக்கள் அர­சாங்­கத்தின் மீதும் சட்­டத்தின் மீதும் நம்­பிக்கை கொள்வர். இலங்­கையின் நீதித்­து­றையில் கால­தா­மதம் உள்­ள­மையை ஏற்றுக்­கொள்­கின்றேன். அண்­மை யில் கொழும்பு கோட்டை நீதி­மன்றில் 50 ரூபாய் திரு­டி­ய­மைக்­கான வழக்கு 10 வரு­டங்­க­ளாக நடந்­துள்­ளது என அறிந்தேன். இதனால் அர­சாங்­கத்தின் செல­வீ­னங்கள் அதி­க­ரிக்­கின்­ற­மையை அறிய முடி­கின்­றது.
    எமது நீதித்­து­றையில் உள்ள குறை­பா­டு­களை கண்­ட­றித்து அது தொடர்பில் எனக்கு அறிக்கை ஒன்றை தாருங்கள் என்று பிர­தம நீதி­ய­ர­ச­ரி­டத்தில் வேண்­டுகோள் விடுக்­கின்றேன்.
    அதேபோல் கடந்த காலங்கள் போல் அல்­லாது இம்­முறை மாகாண சபை­க­ளுக்கு கல்­விக்­கான அதிக தொகை ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இது முன்­னேற்­ற­க­ர­மான செயல். எனினும் அண்­மையில் நான் மாகாண முத­ல­மைச்­சர்­களை சந்­தித்­தி­ருந்த ­போது மாகாண சபை­களில் கல்­விக்­காக ஒதுக்­கப்­படும் நிதி வேறு துறை­க­ளுக்கு பகி­ரப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். அதனால் வரும் நாட்­­களில் அவ்­வா­றான செயற்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்கப் போவ­தில்லை.
    அத்­துடன் கடந்த தேர்தலில் மூதூர் மக்கள் எனக்கு வாக்களித்திருந்தனர் என்ற செய்தி எனக்குக் கிடைத்தது. அதனால் அவர்களுக்கு நன்றி கூற வேண்டிய கடமை உள்ளது என்றார்.
    இந் நிகழ்வில் பிரதம நீதியரசர் ஸ்ரீ பவன்,அமைச்சர் ரவூப் ஹக்கீம், நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
    Virakesari- 
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.நா. மனித உரிமை பேரவை அரசாங்கத்திற்கு வற்புறுத்தல், அழுத்தங்கள் கொடுக்கவில்லை சட்டமும் நீதியும் ஒழுங்காக பின்பற்றப்படுவதே காரணம்; மூதூரில் ஜனாதிபதி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top