• Latest News

    July 26, 2016

    கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் - பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான்

    கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிவான் 50 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

    பருத்தித்துறையை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவர் , கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதியில் நின்று கைத்தொலைபேசியில் ஆபாசப்பட காணொளிகளை பார்வையிட்ட வண்ணம் இருந்துள்ளார்.

    அவ்வேளை குறித்த வீதியின் ஊடக ரோந்து கடமையில் ஈடுபட்ட பொலிசார் அதனை அவதானித்தவுடன் குறித்த நபரிடம் இருந்து கைத்தொலைபேசியை கைப்பற்றியதுடன் , குறித்த நபரையும் கைது செய்தனர்.

    கைது செய்த நபரை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் பொ.சிவகுமார் முன்னிலையில் முற்படுத்திய போது குறித்த நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவருக்கு , 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிவான் 50 மணித்தியாலங்கள் சமூதாய சீர்திருத்தப் பணியில் ஈடுபடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கைத்தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்தவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் - பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top