• Latest News

    July 26, 2016

    வஸீலா சாஹிர் எழுதிய “நிலவுக்குள் சில ரணங்கள்” சிறுகதைத் தொகுதி வெள்ளோட்ட விழா

    (எம்.எஸ்.எம்.சாஹிர்)
    கல்லொலுவ, மினுவாங்கொடை வஸீலா ஸாஹிர் எழுதிய “நிலவுக்குள் சில ரணங்கள்”சிறுகதைத் தொகுதியின் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30க்கு கொழும்பு - 10 ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள அல் -ஹிதாயா மகாவித்தியாலயத்தின் எம்.ஸி. பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்-ஹாஜ் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், மூஷான் இன்டர்நெஷனல் தலைவர் அல்-ஹாஜ் முஸ்லிம் ஸலாஹுதீன் முன்னிலை வகிப்பதோடு, விழாவின் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் கலந்து கொள்கிறார்.
    நிகழ்வின் முதற்பிரதியை புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனர் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக் கொள்கிறார்.
    விழாவில் கௌரவ அதிதிகளாக, நீர்கொழும்பு, மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் முஹம்மது ஈசான், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ்ச் செய்தி நடப்பு விவகாரப் பணிப்பாளர் அல் - ஹாஜ் யூ.எல்.யாக்கூப், லேக் ஹவுஸ் தமிழ்ப்பிரசுரங்களின் ஆலோசகர் எம்.ஏ.எம்.நிலாம், ஸ்ரீலங்கா ஷரீஆக் கவுன்ஸில் தலைவர் மௌலவி எம்.ஸி. ஹஸ்புல்லாஹ் அப்துல் காதர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வஸீலா சாஹிர் எழுதிய “நிலவுக்குள் சில ரணங்கள்” சிறுகதைத் தொகுதி வெள்ளோட்ட விழா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top