சப்னி அஹமட்-
கிழக்கு
மாகாண சுகாதார அமைச்சுக்கு உற்பட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான
மீள் ஆய்வு குழு கூட்டம் இன்று (26) மாகாணப்பணிப்பாளரின் திருகோணமலை
மாவட்ட காரியாலத்தில் இடம்பெற்றது.
கிழக்கு
மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எல் முஹம்மட் நசீர் தலைமையில் இடம்பெற்ற
நிகழ்வின் போது எதிர்காலத்தில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில்
மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் பற்றிய கலந்துரையாடல்களுடன் விரிவான
பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றது.
இதன் போது அலுவலக அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment