• Latest News

    July 30, 2016

    அதிகார சக்திகள் எம்மிடையே பிளவை ஏற்படுத்தி எம்மைப் பிரிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றன ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை கையேற்ற பின்னர் ஹிலாரி

    அமெ­ரிக்கத் தேர்­த­லுக்­கான நேரம் எண்­ணப்­பட்டு வரு­வ­தாக ஹிலாரி கிளின்டன் தெரி­வித்தார்.

    பில­டெல்­பி­யாவில் இடம்­பெற்ற நிகழ்வில் ஜன­நா­யக கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் நிய­ம­னத்தை ஏற்றுக் கொண்­ட­தை­ய­டுத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

    அவர் இந்த நிய­ம­னத்தின் மூலம் அமெ­ரிக்­காவின் பிர­தான கட்­சி­யொன்றால் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்ட முதல் பெண் என்ற பெயரைப் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. அவர் இந்த நிய­ம­னத்­துக்­காக கட்­சிக்குள் பாரிய சவாலை எதிர்­கொண்­டி­ருந்தார்.

    "அதி­கார சக்­திகள் எம்மை பிரிப்­ப­தற்கு அச்­சு­றுத்தல் விடுத்து வரு­கின்­றன.” என ஹிலாரி தெரி­வித்தார்.

    குடி­ய­ரசு கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான டொனால்ட் டிரம்ப் வேற்­று­மையை விதைப்­ப­தாக அவர் குற்­றஞ்­சாட்­டினார். “அவர் எம்மை எஞ்­சிய உல­கத்­தி­லி­ருந்தும் ஒரு­வ­ருக்­கொ­ரு­வ­ரி­ட­மி­ருந்தும் பிரிக்க விரும்­பு­கிறார்" என ஹிலாரி கூறினார்.

    இந்­நி­லையில் மேற்­படி உரை குறித்து டொனால்ட் டிரம்ப் டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் விடுத்த செய்­தியில், அடிப்­ப­டை­வாத இஸ்லாம் குறித்து குறிப்­பிட ஹிலாரி கிளின்டன் தவ­றி­யுள்­ளமை, இந்த நாட்டைத் தலைமை தாங்கி வழி­ந­டத்­து­வ­தற்கு பொருத்­த­மற்­ற­வ­ராக அவரை மாற்­றி­யுள்­ளது என தெரி­வித்­துள்ளார்.

    ஹிலாரி கிளின்டன் மேடையில் தோன்­று­வ­தற்கு முன்னர் அவ­ரது மகள் செல்ஸி கிளின்டன் தனது தாயா ரின் தனிப்­பட்ட ஞாப­கங்­களை கூடி­யி­ருந்த பெருந் ­தொ­கை­யான ஆத­ர­வா­ளர்­க­ளுடன் பகிர்ந்து கொண்டார். அற்­பு­த­மான அன்­பா­த­ர­வு­டைய மகிழ்ச்­சி­க­ர­மான தனது தாயார் எப்­போதும் தனக்கு ஆத­ர­வாக இருப்­ப­தாக அவர் கூறினார்.

    தனது மகளின் உரையைத் தொடர்ந்து மேடையில் தோன்றி உரை­யாற்­றிய ஹிலாரி கிளின்டன், "நம்­பிக்கை மற்றும் கௌர­வத்­துக்­கி­டை­யி­லான பிணைப்­புகள் பிள­வ­டைந்து வரு­கின்­றன. அங்கு உத்­த­ர­வா­தங்கள் எதுவும் இல்லை. தற்­போது நாங்கள் ஒன்­றாக இணைந்து பணி­யாற்­று­வதா என தீர்­மா­னிக்க வேண்­டி­யுள்­ளது. அதன் மூலமே நாங்கள் ஒன்­றாக எழுச்­சி­பெற முடியும்" எனத் தெரி­வித் தார்.

    “நாங்கள் பயப்­ப­ட­வில்லை. நாம் சவால்­க­ளுக்கு எதி­ராக எழுச்­சி­பெ­றுவோம்" என சூளு­ரைத்த அவர், அமெ­ரிக்­காவின் சுபீட்­ச­மா­னது சமத்­து­வ­மின்மை, வரை­யறுக்­கப்­பட்ட சமூக ஒருங்­கி­ணைப்பு, அர­சியல் முட்­டுக்­கட்டை, உள்­நாட்­டிலும் வெளி­நா­டு­க­ளி­லுமிருந்­து­மான அச்­சு­றுத்­தல்கள் உள்­ள­டங்­க­லான விடயங்­களால் அபா­யத்தில் உள்­ள­தாக கூறினார்.

    எனினும் சுதந்­திரம் மற்றும் சமத்­துவம், நீதி மற்றும் வாய்ப்பு ஆகிய அமெ­ரிக்­காவின் தார்­மீக பண்­பு­களின் உத­வி­யுடன் அந்த சவால்­களை வெற்றி கொள்ளக் கூடி­ய­தா­க­வி­ருக்கும் என நம்­பு­வ­தாக அவர் தெரிவித்தார்.

    அதிக ஊதி­யத்­து­ட­னான தொழில் வாய்ப்­பு­களை உரு­வாக்­குதல், நிதி சீர்­தி­ருத்­தங்­களை முன்­னெ­டுத்தல், வாக்­க­ளிக்கும் உரி­மை­களை பாது­காத்தல், தூய சக்திக் கொள்­கை­யி­னூ­டாக கால­நிலை மாற்றம் தொடர்பில் பிர­சார நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்தல், அமெ­ரிக்­கா­வி­லுள்ள ஆவ­ணப்­ப­டுத்­தப்­ப­டாத குடி­யேற்­ற­வா­சிகள் பிர­ஜா­வு­ரி­மையை பெறு­வ­தற்கு வழி­வகை செய்தல், ஆகக் குறைந்த தேசிய வரு­மா­னத்தை அதி­க­ரித்தல், துப்­பாக்கி பாவனை கட்­டுப்­பாடு, நீதி­யற்ற வர்த்­தக உடன்­ப­டிக்­கை­களை நிரா­க­ரித்தல், உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்தல் போன்­ற­வற்றை முன்­னெ­டுக்க ஹிலாரி கிளின்டன் உறு­தி­ய­ளித்தார்.

    அதே­ச­மயம் தனது போட்டி வேட்­பா­ள­ரான டொனால்ட் டிரம்பால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள திட்­டங்­க­ளுக்கு அவர் கடும் கண்­டனம் தெரி­வித்தார்.

    “நாங்கள் (குடி­யேற்­ற­வா­சி­களைத் தடுக்க) சுவரை கட்டமைக்கப் போவதில்லை. நாம் அனைவரும் நல்ல ஊதியத்துடன் சிறந்த தொழிலைப் பெற வழிவகை செய்யும் வகையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பப் போகிறோம். தான் தனியான அனைத்தையும் சீர்செய்யப் போவதாக கூறும் எவரையும் நம்ப வேண்டாம். அவர் (டொனால்ட் டிரம்ப்) 70 நிமிடங்கள் உரையாற்றினார். ஆனால் அவர் பூச்சிய தீர்வுகளையே முன்வைத்தார்.” என ஹிலாரி குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அதிகார சக்திகள் எம்மிடையே பிளவை ஏற்படுத்தி எம்மைப் பிரிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றன ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்தை கையேற்ற பின்னர் ஹிலாரி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top