காவி மீது கைவைக்க வேண்டாம்; மூன்று பௌத்த அமைப்புக்களின் தேரர்கள் எச்சரிக்கை
கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்தால் நிலைமை
பாரதூரமாகும். அவரை கைது செய்வதற்கு முன் பாரதூரமான இனவாத
கருத்துக்களை வெளியிடும் விக்கினேஸ்வரன், சிவாஜிலிங்கம்
உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் என மூன்று பெளத்த அமைப்புக்களின்
தேரர்கள் வலியுறுத்தினர். அண்மையில் கலகொட அத்தே ஞானசார தேரரை
கைது செய்யு மாறு அமைச்சர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு அழுத்தம்
கொடுத்தமையானது அரசியலமைப்புக்கு முரணானது. எனவே காவியின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கொழும்பு
தேசிய நூலகத்தில் ஊழலுக்கு எதிரான அமைப்பு, அஸ்கிரிய பீடம்,
ரத்மலானை பெளத்த ஆய்வு மையம் ஆகியவற்றின் தேரர்கள்குழு ஒன்றிணைந்து
நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி அமைப்புக்களின்
தேரர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கள தேரர் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட நிலைப்பாடுகளை
மையப்படுத்திக்கொண்டு இனவாத தூண்டல் செயற்பாடுகள்
முன்னெடுக்கப்படுகின்றன. இந்த இனவாத செயற்பாடுகளின்
பின்புலத்தில் இருப்பவர்கள் யார் என்பதும் கேள்விக்குறியாகவே
உள்ளது.
நாட்டில் சட்டம் என்பது சகலருக்கும் ஒரே முறையில்
செயற்படுத்தப்பட வேண்டும் என்பதற்கிணங்க வன்முறைகள் எங்கு
நடந்தாலும் அங்கு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் நாம்
உறுதியாக உள்ளோம்.முப்பது வருடங்கள தொடர்சியான யுத்தினை பார்த்த
நாடு என்ற வகையில் எமக்கு இனவாத செயற்பாடுகள் நாட்டில் தொடர வேண்டும்
என்ற எண்ணமில்லை. அவற்றை முற்றாக ஒழிக்க வேண்டியதன் தேவையை நாங்கள்
அறிவோம்.
இவ்வாறிருக்கின்ற போது தற்காலத்தில் இணையத்தளங்கள்
வாயிலாக ஞானசார தேரர் என்ற ஒருவரின் தனிப்பட்ட விடயங்களை
மையப்படுத்திக்கொண்டு அவரை கைது செய்யவேண்டும் என்று
விடுக்கப்படும் அழுத்தங்கள் இனவாத பிரசாரங்களாகவே அமைந்துள்ளன.
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அதன்
பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது வரையில் மர்மமாகவே
உள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து சட்டம் சார்ந்த தரப்புக்கள் அவதான
திரும்வேண்டிய அவசியம் உள்ளது.
இவ்வாறிருக்கின்ற போதுதான் அண்மையில் ஒரு இனத்தை சார்ந்த மக்கள்
குழுக்கள் ஒன்றுகூடி ஞானசார தேரரை கைது செய்ய வேண்டும் என்று
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்திருந்தார்கள். அவரை கைது செய்ய
வேண்டுமாயின் முதலில் வில்பத்து வனத்தைவ சீரழிப்பவர்களை கைது செய்ய
வேண்டிய தேவை உள்ளது. அதனால் இனவாத போக்கில் செல்லும் சகலரையும்
நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். அதேபோல் ஞனசார தேரரை கைது
செய்யுங்கள் என்று அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த அமைச்சர்கள்
குழு ஒரு இன மக்களை மாத்திரம் பிரதிதுவப்படுத்திக்கொண்டு
செயற்பட்டமை அரசியலமைப்புக்கும் முரணான செயளாகும்.
எனவே இனவாதத்தை தூண்டிவிடும் மற்றவர்களை விட்டு ஞானசார
தேரரை மாத்திரம் கைது செய்ய வேண்டும் என்பது நியாயமானதல்ல. அவ்வாறு
செய்தால் நிலைமை பாராதூரமான அதன் பலன்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை
ஏற்படும்.அத்துடன் பெளத்தர்கள் போல நல்லிணக்கத்தை
புரிந்துக்கொண்டவர்கள் எவரும் இருக்க முடியாது. அதனால் தனிப்பட்ட
ஒரு மனிதரின் செயற்பாடுகளை மாத்திரம் கொண்டு தவறான போக்கில் செல்ல
கூடாது. அதனால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும்
பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட வேண்டிய அமைச்சர்கள் ஒரு
இனத்திற்கு மாத்திரம் சார்பாக கூடி செயற்பட்டமை அரசியலமைப்புக்கு
முரணானதாகும் என்றார்.
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஹேகொட விபிஸ்ஸி தேரர் தெரிவிக்கையில்,
தற்போது எமது நாட்டில் நல்லாட்சி நிலவுகின்றதை சதகமாக
பயன்படுத்திக்கொண்டு சில சக்திகள் இனவாத செயற்பாடுகளை
மேம்படுத்த முயற்சிக்கின்றார்கள். அதற்காக கலகொட அத்தே ஞானசார
தேரரின் செயற்பாடுகள் சகலதையும் சரியானவை என்று நாங்கள் கூறவில்லை.
அவர் தனிப்பட்ட பிரச்சினை ஒன்றுக்காக பேசவில்லை. மாறாக நாட்டின்
பொதுவான பிரச்சினை ஒன்றிற்காக போராடுகின்ற காரணத்தினாலேயே
அவரின் சார்பில் பேசுகின்றோம்.
அண்மையில் கலகொட அத்தே ஞானசார தேரர் ,அஸ்கிரிய, மல்வத்து
பீடாதிபதிபதிகள் உள்ளிட்ட மகா சங்க தேரர்கள் குழுவை சந்த்தித்து தன்னை
கைது செய்வதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக
சுட்டிக்காட்டியிருந்தார்.
இதன் போது மகாசங்க தேரர்கள் ஞானசார தேரரை பொறுமையா
இருக்கும்படி அறிவுரை வழங்கி அனுப்பியிருந்தார்கள். அதன் பின்னர்
அவர் குருணாகலுக்கு சென்றபோதுதான் 200 க்கும் மேற்பட்ட
பொலிஸார்கள் சென்று வீதிகளை மறித்து அவரை கைது செய்ய முற்பட்டதால்
தான் பிரச்சினை முற்றியது.
அதன் பின்னர் சர்வமத கூட்டத்தில் நாங்கள் பங்கேற்றிருந்த
போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் மேற்படி
விவகாரத்தை தெரிவித்த போது, அவர் தேரர்களின் கருத்துக்களை
அவதானித்துவிட்டு பின்னர் இந்த நாட்டில் எந்த ஒரு தேரருக்கும்
நெருக்கடி ஏற்படுவதற்கு இடமளியேன் என்று உறுதியாக கூறினார்.
அதனால் தான் இன்று நாங்களும் வலியுறுத்துகின்றோம்
விக்கினேஸ்வர் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தனிநாடு வேண்டும்
என்று பாரதூரமான கருத்துகளை வெளியிடுகின்ற போது
அவர்களிட்டத்தில் சட்டம் தன் கடமையை செய்யவில்லை மறுபுறத்தில்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் அரச சார்பற்ற
நிறுவங்களின் தேவைக்கான வடக்கு மக்களுக்கு சேவையாற்றுவதாக
கூறிக்கொண்டு இனவாத செயற்பாடுகளுக்கு வலு சேர்கின்றார்.
அதனால் இந்த பிரச்சினைகளை மேலும்
பெரிதுபடுத்திக்காண்டிருப்பதை விட இவற்றுக்கு
பேச்சுவார்த்தைகள் மூலர் தீர்வு காண்பதே சிறந்தாகும். தற்போது
வடக்கு கிழக்கிலும் கூட 400 க்கும் மேற்பட்ட பெளத்தர்களின் புராதன
ஸ்தலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக எந்த
நடவடிக்கையும் இல்லை.
இந்த பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசுகின்ற போது
அமைச்சர் ஹக்கீம் மேற்படி விடயங்களை பாராளுமன்றத்தில் பேசுவது
பொருத்தமல்ல என்கின்றார். எனேவ அது குறித்தும் உரிய தரப்புக்கள்
சிந்திக்க வேண்டும். சிங்களவர்கள் இனவாதிகள் என்று கூறினாலும்
இன்றும் கூட கண்டி தலதா மாளிகையில் இறுதிகட்ட மன்னன் ஸ்ரீ
விக்கிரமராஜசிங்கனின் ஆத்ம நலன் வேண்டிதான் முதல் பூஜை வழிபாடுகள்
இடம்பெறுகின்றது இதுவே நல்லிணகம் என்றார்.
பெளத்த ஆய்வு பீடத்தின் சார்பில் ஊடகவியலாளல் சந்திப்பில் கலந்துக்கொண்ட கெடவல ஹேமாலோக தேரர் தெரிவிக்கையில்,
ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டுமாயின் அவருக்கு முன்பாக கைது
செய்யப்பட வேண்டிய பலர் உள்ளார்கள். அதனால் காவியின் மீது கைவைக்காதீர்கள்
என்று எச்சரிகைகைள நாங்கள் விடுக்கின்றோம்.
நாங்கள் இனவாதம் பேச முற்படவில்லை. மட்டமான அரசியல்வாதிகள் தான்
இனவாதத்தை தூண்டிவிடுகின்றனர். அதனால் சட்டத்தை சகலரும் சமமாக
நடைமுறைப்படுத்துங்கள் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.
V-

0 comments:
Post a Comment