• Latest News

    December 08, 2017

    கல்முனை மாநகர, காரைதீவு பிரதேச சபைகளுக்கு சுயேற்சையில் போட்டியிட வை. எம். ஹனீபா தலைமையில் இன்று கட்டுப்பணம் செலுத்தின.

    - யூ.கே.காலித்தீன் -

    திர்வரும்  உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சுயேற்சையாக போட்டியிட சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் பணிமனை தீர்மானித்ததற்கமைவாக, இன்று (08) கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றுக்கான இரண்டு சுயேற்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின.

    சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை. எம். ஹனீபா தலைமையில் கல்முனை மாநகரசபைக்கும், 
    சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும், மாளிகைக்காடு சைத் இப்னு தாபித் பள்ளிவாசல் தலைவருமான எம்.ஐ. ஸாஹிர் ஹுஸைன் தலைமையில் காரைதீவு பிரதேச சபைக்கும் கட்டுப்பணங்கள் செலுத்தப்பட்டன.

    கல்முனை மாநகரசபைக்காக போட்டியிடும் கட்சிகள், சுயேற்சைக்குளுக்களுக்கான வரிசையில் கட்டப்பட்ட முதலாவது கட்டுப்பணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர, காரைதீவு பிரதேச சபைகளுக்கு சுயேற்சையில் போட்டியிட வை. எம். ஹனீபா தலைமையில் இன்று கட்டுப்பணம் செலுத்தின. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top