• Latest News

    January 01, 2018

    100 சுகாதார ஊழியர்களது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

    ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் -
    ஏறாவூர் நகர சபையில் கடமையாற்றுகின்ற 100 சுகாதார ஊழியர்களது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில் கற்றல் உபகரணங்களை நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
    ஏறாவூர் நகர சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கல்வி மேம்பாட்டில் அக்கரை கொண்டவர்களின் ஒத்துழைப்புடன் தலா 1600 ரூபா கொண்ட கற்றல் உபகரணங்களே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.  
    நகர சபையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகர சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 100 சுகாதார ஊழியர்களது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top