புதிய அரசியலமைப்பின் ஊடாகவே நீதியரசர்களின் பதவி காலத்தை திருத்தம் செய்யலாம். தற்போது தெரிவு செய்யப்பட்ட வகையில் நீதியரசர்களின் பதவி்காலத்தை நீட்டிப்பது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நீதித்துறையை அரசியல்மயமாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.நீதிமன்ற கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டும்.
கீழ் நிலை நீதிமன்றங்களில் வெற்றிடம் காணப்படுவால் உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார் .இது முற்றிலும் தவறானது.
நீதியரசர்களின் நியமனத்தை தாமதப்படுத்துவதால் பல நீதிபதிகளின் பதவி உயர்வு தடுக்கப்படுகிறது.இது முறையற்றதொரு செயற்பாடு.
உயர் நீதிமன்றத்துக்கு நியமனம் பெறும் தகைமை உள்ளவர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்துடன் ஓய்வுப் பெறும் நிலை காணப்படுகிறது. கடந்த காலங்களிலும் அவ்வாறான நிலைமையே காணப்பட்டது.
அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொண்டு பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் ்முயற்சிக்கிறது.அதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.
0 comments:
Post a Comment