• Latest News

    May 22, 2018

    நிகவெரட்டிய அபுகாகமையில் சீற்றம் நேரில் சென்று பார்வையிட்டார் முன்னால் மாகாணசபை உறுப்பினர் என்.எம்.நஸீர் (MA)


    றிம்சி ஜலீல் -
    நடு முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நிகவெரட்டிய அபுகாகம பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நிகவெரட்டிய மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் ரஹ்மதுல்லாஹ் ஆசிரியர் அவர்களின் அழைப்பின் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்தலைருமான என்.எம். நஸீர் (MA) இன்று (21) நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

    தான் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த போது அபுகாகம பாதையை அபிவிருத்தி செய்து மாற்றியமைக்க பல முயற்சிகள் செய்ததாகவும் எதிர்வரும் காலங்களில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் அபுகாகம பாதையை கார்ப்பட் வீதியாக செய்துதர முயற்சி செய்வதாகவும் என்.எம்.நஸீர்(MA) தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட செயலாளரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான அன்பாஸ் அமால்தீன் பிரதேசசபை உறுப்பினர்களான சபீர், அஸ்ஹர் மக்கள் காங்கிரஸ் கல்வி அபிவிருத்தி அமைப்பாளர் ரியாஸ் மொளவி மற்றும் மக்கள் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நிகவெரட்டிய அபுகாகமையில் சீற்றம் நேரில் சென்று பார்வையிட்டார் முன்னால் மாகாணசபை உறுப்பினர் என்.எம்.நஸீர் (MA) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top