காலி மாவட்டத்தில் 10 தேர்தல் தொகுதிகளில் கடந்த உள்ளூராட்சி சபைத்
தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு
வெற்றி பெற்ற மற்றும் தோல்வியடைந்த 150 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில்
இணைந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் இன்று காலி ஆராதனா ஹோட்டலில் அமைச்சர் வஜிர அபேவர்தனவிடம் இருந்து
ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவ அட்டையை பெற்றுக்கொண்டனர்.
மகிந்த ராஜபக்சவின் குடும்ப அரசியலுக்கு எதிராக புதிய ஜனநாயக முன்னணியின்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக படுபடுவதாக அவர்கள்
தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment