• Latest News

    January 12, 2020

    அமெரிக்கப் படைகள் இலங்கைக்கு வந்தால் தற்கொலை தாக்குதல்கள் கூட நடத்தப்படலாம் - சஜித் பிரேமதாச

    அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் காரணமாக இலங்கைக்கு அச்சுறுத்தல் உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
    பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

    இலங்கையில் ஏற்கனவே மத்திய கிழக்கு பிரச்சினையைக் காட்டிலும் நான்கு மடங்கு பிரச்சினை நிலவியது.

    இந்தநிலையில் தற்போதைய நிலையில் ஏ.சி.எஸ்.ஏ உடன்படிக்கையின் படி அமெரிக்கா இலங்கையை முக்கிய தளமாக பயன்படுத்த முடியும்.

    இந்த நிலையில் அமெரிக்கர்களின் பிரசன்னம் இருக்கும் இடங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன்படி அமெரிக்கப் படைகள் இலங்கைக்கு வந்தால் இலங்கையும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். தற்கொலை தாக்குதல்கள் கூட நடத்தப்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமெரிக்கப் படைகள் இலங்கைக்கு வந்தால் தற்கொலை தாக்குதல்கள் கூட நடத்தப்படலாம் - சஜித் பிரேமதாச Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top