இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள அதேவேளை, மேலும் ஒரு கொரோனா தொற்றுக்குள்ளான
நபர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும்
தெரிவித்தது.
இதன்படி இலங்கையில் இதுவரை 323 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அதேவேளை, 105 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, 212 கொரோனா தொற்றாளர்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment