• Latest News

    April 25, 2020

    விலை மதிப்பற்ற திமிங்கிலத்தின் அம்பருடன் ஒருவர் கைது

    விலை மதிப்பீடு செய்யப்படாத 11 கிலோ கிராம் அம்பர் என்ற திமிலங்கிலத்தின் கழிவுடன் மீனவர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    கல்பிட்டி கந்தகுளி கடற்கரையில் படகில் அம்பர் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீனவருடன் பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.

    கடல் வாழ் பாலூட்டி விலங்கினமான திமிங்கிலத்தின் உடலில் உற்பத்தியாகும் அம்பர் என்ற இந்த திரவியத்தை வைத்திருப்பது வனம் மற்றும் கடல் ஜீவராசிகள் சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும் கல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

    அம்பர் தொடர்பாக தகவல்களை வெளியிட்டுள்ள கல்பிட்டி வனஜீவராசிகள் அலுவலகத்தின் சிரேஷ்ட மஞ்சுள குமார மொரதென்ன,

    “அம்பர் திமிங்கிலத்தின் உணவு ஜீரணிக்கும் தொகுதிக்குள் உற்பத்தியாகின்றது. திமிங்கிலத்தின் உடலில் நீண்டகாலம் நடக்கும் இரசாயன மாற்றத்தின் பிரதிபலனாக அம்பர் உருவாகின்றது. இதனை திமிங்கிலம் வாந்தி அல்லது கழிவாக கடலுக்குள் வெளியேற்றுகிறது. இது மிகவும் அபூர்வமான திரவியம் என்பதால் விலை மதிப்புக் கூடியது. வாசனை திரவியங்களை தயாரிக்க இதனை பயன்படுத்துகின்றனர்” எனக் கூறியுள்ளார்.

    கைது செய்யப்பட்ட மீனவர் , அம்பருடன் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: விலை மதிப்பற்ற திமிங்கிலத்தின் அம்பருடன் ஒருவர் கைது Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top