• Latest News

    May 11, 2020

    மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும்.

    நாட்டை இன்று முதல் வழமை நிலைமைக்கு கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    இருந்த போதிலும் அதற்கான சரியான திட்டங்களை முன்வைக்கவில்லை என அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜயந்த பண்டார தெரிவித்துள்ளார்.

    கொழும்பு - பொரளையில் உள்ள சுவசேவா சங்கத்தின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
    மேலும் கூறுகையில்,

    உரிய திட்டங்கள் இன்றி நாட்டை இன்று திறப்பதன் மூலம் மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும்.

    இந்த நடவடிக்கை காரணமாக கொரோனா வைரஸ் நாட்டிற்குள் மேலும் பரவக் கூடும் எனவும் மருத்துவர் ஜயந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மிகப் பெரிய ஆபத்தை எதிர்நோக்க நேரிடும். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top