• Latest News

    February 13, 2021

    அரசாங்கத்திற்கு ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை - ரிஷாட் பதியூதீன்

    எந்தவித நிபந்தனைகளும் இன்றி தான் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரான ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

    ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை உறுதி செய்தார்.

    இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளியான செய்திகளில் எந்தவொரு உண்மையும் கிடையாது.

    அரசாங்கத்துடன் நான் இணைவதாக வெளியாகியுள்ள செய்திகளை நிராகரிக்கிறேன் என்றார்.

    *******************************************************

    நிபந்தனையின்றி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் - றிசாட்

    நிபந்தனைகள் இன்றி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

    அரசாங்கத்தின் முக்கியமான தலைவரை சந்தித்த பின்னர் அவர் இதனை அறிவித்துள்ளார்.

    கொரோனா தொற்றால் இறக்கும் நபர்களை அடக்கம் செய்ய இடமளிக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையை அடுத்தே பதியூதீன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    https://www.tamilwin.com/politics/01/268627?ref=home-top-trending 

     

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்திற்கு ஆதரவு என்பதில் எந்த உண்மையும் இல்லை - ரிஷாட் பதியூதீன் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top