அமைச்சர்
பந்துல குணவர்தன கூறாதது ஒன்றுமே இல்லை, அவருடைய கூற்றை அவரது மனைவியே
கேட்பதில்லை எனத் தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, குடும்பமொன்றை
நடத்துவதற்கு 2,500 ரூபாய் மாதமொன்றுக்கு போதுமென்றார், நிவாரணம்
வழங்கப்படும் என்றார். உரமானியம் வழங்கப்படும் என்றார் ஒன்றுமே
நடைபெறவில்லை. ஆகையால், கொஞ்சம் அமருங்கள் என்றார்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவாதத்தில் கலந்துகொண்டு, ஊடகங்கள் மீதான அடங்குமுறை தொடர்பில் உரையாற்றிக்கொண்டிருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“வர்த்தமானி அறிவித்தலுக்கு இந்த அரசாங்கத்துக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை, மக்களின் குரலுக்கு செவிசாய்க்காது அடக்குமுறையை முன்னெடுக்கின்றது” என்றார்.

0 comments:
Post a Comment