சாரா ஜஸ்மினின் மரபணு பரிசோதனை குறித்த அறிக்கையை ஏற்க முடியாது என அருட்தந்தை சிறில்காமினி தெரிவித்துள்ளார்.
2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் சாரா ஜாஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் உயிரிழந்தமை விஞ்ஞானப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்தப் பின்னணியிலேலே அருட்தந்தை சிறில்காமினி மேற்படிகருத்தை வெளியிட்டுள்ளார்.
சாரா ஜஸ்மின் என அழைக்கப்படும் புலத்சினி மகேந்திரனின் உயிரிழப்பு குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அருட்தந்தை காமினிசிறில் தெரிவித்துள்ளார்.
அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை முன்னைய அறிக்கைகளை விட முற்றிலும் வேறுபட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment