• Latest News

    November 13, 2023

    அரசாங்கத்தின் உட்கட்சிப்பூசல்களுகளால் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு - நாமல் ராஜபக்ஸ


     கிரிக்கெட் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    கிரிக்கெட்  நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் கிரிக்கெட் வீரர்களுக்கே பாதிப்பு அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் நிர்வாக பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    அரசியல் மற்றும் நிர்வாக பிரச்சினையால் ஶ்ரீலங்கா கிரிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் பேரவை இடை நிறுத்தியுள்ளது.

    இவ்வாறு இடை நிறுத்தப்படுவதனால் வருடாந்தம் கிடைக்கப் பெறும் நூறு மில்லியன் டொலர் நேரடி மற்றும் மறைமுக வருமானத்தை இழக்க நேரிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

    குறிப்பாக அரசாங்கத்தின் உட்கட்சிப்பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தி தீர்வு காண முயற்சிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.    

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அரசாங்கத்தின் உட்கட்சிப்பூசல்களுகளால் கிரிக்கெட்டுக்கு பாதிப்பு - நாமல் ராஜபக்ஸ Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top