• Latest News

    July 24, 2013

    உலமாக்கள் அரசாங்கத்திற்கு கூஜா தூக்கிக் கொண்டு சமூகத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பை  சிரேஷ்ட அமைச்சர்கள்  நேற்று செவ்வாய்க் கிழமை (23.07.2013) சந்தித்து பேச்சு நடத்தியுள்ளர். மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்     பெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் திஸ்ஸ கரலியத்த ஆகியோர் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மன்னார் மாவட்ட  கத்தோ லிக்க குருமார்களுக்கும்  இடையில் சந்திப்பொன்று கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது. இந்த சந்திப்பை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை நேரில் தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி மிகவும் துணிச்சலுடன் பேசியவர்தான் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப். அவர் தமிழர்களின் பிரச்சினைகளை சர்தேச மட்டம் வரை  கொண்டு செல்லுகின்றவராகவும் இருக்கின்றார்.
    தமிழர்களின் பிரச்சினைகளில் அவர் செலுத்திய தாக்கத்தின் காரணமாகத்தான் அரசாங்கம் இரண்டு அமைச்சர்களை மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் இல்லத்திற்கு அனுப்பி மன்னாரில் காணப்படும் பிரச்சினைகளைப் பற்றி நேரில் அறிந்து வரச் செய்துள்ளது.
    ஆனால்,     முஸ்லிம்களின் உலமாக்கள் அரசாங்கத்திற்கு கூஜா தூக்கிக் கொண்டு சமூகத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்திற்கு ஆதரவு தேடி வீதிக்கு இறங்கிய உலமாக்கள், முஸ்லிம் நாடுகளுக்கும் சென்றும் அரசாங்கத்திற்கு ஆதரவை தேடிக் கொடுத்தார்கள்.
    அதே வேளை, முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்ற பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்கு சக்தியற்றவர்களாக இருப்பது ஏன். முஸ்லிம்களின் அரசியல்வாதிகளைப் போன்று உலமாக்களும் இருக்கி;ன்றார்கள். முஸ்லிம்களின் தலை விதியை மாற்ற வேண்டுமாக இருந்தால் தனி நபர்களினால் முடியாது. முஸ்லிம்களின் பாதுகாப்பை வேண்டி அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். அல்லாஹ் போது மானவன். கண்டறிவதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்குஅமைவாக இரண்டு அமைச்சர்களும் மன்னாருக்கு நேற்று சென்றுள்ளனர். இதன்போதே மன்னார் ஆயரை அமைச்சர்கள் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளர். மன்னாரில் காணப்படுகின்ற சட்டவிரோத மீள்குடியேற்றம், பாகுபாடான வேலைவாய்ப்பு வழங்குகின்றமை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மன்னார் மாவட்ட  கத்தோலிக்க குருமார்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டமை குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: உலமாக்கள் அரசாங்கத்திற்கு கூஜா தூக்கிக் கொண்டு சமூகத்தை காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top