• Latest News

    January 04, 2021

    கொரோனா மரணங்கள் தொடர்பில் அடிப்படைவாத சக்திகளுக்கும் அடிப்பணிய கூடாது - பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்

    கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களின் உடல் சம்பந்தமாக செயற்பட வேண்டிய விதத்தை அரசாங்கமே சமூக பிரச்சினையாக மாற்றியதாக பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

    கொரோனா மரணங்கள் தொடர்பான தீர்மானத்தில் எந்த அடிப்படைவாத சக்திகளுக்கும் அடிப்பணிய கூடாது. கொரோனா வைரஸை இன்னும் நாம் அடையாளம் கண்டு முடிக்கவில்லை.

    கொரோனா வைரஸின் செயற்பாடு தொடர்பாக விஞ்ஞானிகளுக்கு இதுவரை சரியான புரிதல் ஏற்படவில்லை. இது உலகத்திற்கு புதிதானது. இதனால், கொரோனா மரணங்கள் தொடர்பில் இனவாத அல்லது அடிப்படைவாதத்திற்கு அடிப்பணிந்த தீர்மானத்தை எடுக்கக் கூடாது எனவும் அபயதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கொரோனா மரணங்கள் தொடர்பில் அடிப்படைவாத சக்திகளுக்கும் அடிப்பணிய கூடாது - பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top