• Latest News

    August 17, 2013

    பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள அறிவுறுத்தல் பலகைகளை அகற்ற உத்தரவு !


    parakahaகடந்த ஞாயிற்றுக்கிழமை குருநாகல் நகரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞான தேரர்  கண்டி குருநாகல் வீதியில் பரகஹதெனிய பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதியாகச் செல்லுங்கள் என்று   பதாதையை அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததுடன் அதனை அகற்றா விட்டால் தாங்கள் அகற்ற வேண்டி வரும் எனவும் அங்கு அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். அறிவுறுத்தல் பலகை சிங்கள பௌத்தர்களை அவமானப் படுத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்

    மாவத்தகமை, பறகஹதெனிய ஜும் ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள அறிவுறுத்தல் பலகைகளை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு பெலச நீதவான் நாமல் பெரேரா உத்தரவிட்டுள்ளார். பறகஹதெனிய ஜும்ஆப் பள்ளிவாசலின் மௌலவிக்கும், வீதி அதிகார சபை அதிகாரிக்குமே மேற்கண்டவாறு நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். குறித்த அறிவுறுத்தல் பலகையை 14 நாட்களுக்குள் அகற்றிவிடுமாறே அவர் உத்தரவிட்டுள்ளார்.
    மாவத்தகமை போலீஸ் நிலைய பொருப்பதிகாரி பிரதேசத்தின் சிங்கள பௌத்தர்கள் கிளந்து எழுவதை தடுக்கும் நோக்கில் அந்த பதாக்கைகளை அகற்ற அனுமததிக்குமாறு நீதிமன்றத்தை கோரிய வழக்கு  விசாரணயின் போது இந்த தீர்ப்பு வழங்குகப் பட்டுள்ளது.
    அந்த எச்சரிக்கைக்கு தொடர்ந்து  மறுதினம்  பொலிஸார்   பள்ளிவாசலுக்கு  முன்பாகவுள்ள அறிவுறுத்தல் பலகையை அகற்ற முற்பட்ட போது ஊர் மக்களுக்கும் மற்றும் பொலிஸாருக்குமிடையே கருத்து முரண்பாடுகள் இடம் பெற்றதுடன்  ஊர் மக்கள்  திரண்டு அதனைத் தடுத்து நிறுத்தினர்.  நீதி மன்றத்தின் சட்ட ரீதியான ஆணையுடன்  வந்தால் இதனைக் அகற்றுவதற்கு நாங்கள் அனுமதிப்போம் என்று கூறி இதனை அகற்றவிடாது  தடுத்து நிறுத்தினர்.
    அதன் பின்னர் நேற்று பறகஹதெனிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாகவிருந்த அறிவுறுத்தல் பலகையை முஸ்லிம் ஆசிரியர் ஒருவர் சேதப்படுத்த முயன்றதாக தெரிவித்து கைதாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கதாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பள்ளிவாசலுக்கு முன்பாகவுள்ள அறிவுறுத்தல் பலகைகளை அகற்ற உத்தரவு ! Rating: 5 Reviewed By: msdeen
    Scroll to Top