ஹோர்முஸ் நீரிணையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அமெரிக்கா கூறி வரும் நிலையில், ஈரானுடன் தொடர்புடைய 34 கப்பல்கள் அமெரிக்காவின் முற்றுகையைத் தாண்டிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 13 அன்று ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதற்காக அமெரிக்கா விதித்த கடல்வழி முற்றுகையை (Blockade) மீறி இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
'டோரினா' (Dorena) போன்ற பாரிய ஈரானியக் கப்பல்கள், தங்களது இருப்பிடத்தைக் காட்டும் 'டிரான்ஸ்பாண்டர்' கருவிகளை அணைத்துவிட்டு இரவோடு இரவாகத் தப்பியுள்ளன.
மலேசியக் கடற்பரப்பில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றி, அதன் பிறப்பிடத்தை மறைக்கும் (Ship-to-ship transfer) தந்திரத்தை ஈரான் கையாண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment