இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லிம்
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது உட்பட சிறுபான்மை சமூகத்தினர் எதிராக
நடந்துள்ள சம்பவங்கள் குறித்து தன்னிடம் விசாரித்ததாக நவநீதம் பிள்ளையை
சந்தித்த பின்னர் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தன்னிடம் விசாரித்ததாக ஹக்கீம் கூறினார்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என நவநீதம் பிள்ளை தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை நீதித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் முழுமையாக நீங்கிவிட்டதாக அரசாங்கம் கருதாத நிலையில், இச்சட்டத்தை தற்போது முற்றாக நீக்கும் முனைப்பில் அரசாங்கம் இல்லை என்பதை ஐநா ஆணையாளரிடம் தான் தெரிவித்ததாக ரவூஃப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
தமிழ் அரசியல் கைதிகள் வழக்கு விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஐநா மனித உரிமை ஆணையாளர் தன்னிடம் விசாரித்ததாக ஹக்கீம் கூறினார்.
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என நவநீதம் பிள்ளை தன்னிடம் தெரிவித்ததாக இலங்கை நீதித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் முழுமையாக நீங்கிவிட்டதாக அரசாங்கம் கருதாத நிலையில், இச்சட்டத்தை தற்போது முற்றாக நீக்கும் முனைப்பில் அரசாங்கம் இல்லை என்பதை ஐநா ஆணையாளரிடம் தான் தெரிவித்ததாக ரவூஃப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment