கொழும்பு தேசிய வைதியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெளத்த தேரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
கடந்த 20 ஆம் திகதி கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைதியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த பெளத்த தேரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் .
இவர் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப் பட்ட நிலையில் சிகிச்சை
பலனின்றி இன்று மரணமாகியுள்ளார் . இவரை தாக்கியவர்கள் எவரும் கைது
செய்யப்படவில்லை என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன .
அண்மைகாலமாக பௌத்த தேரர்களும் நாட்டில் இயங்கிவரும் பெளத்த தீவிரவாத
அமைப்புகளின் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
எனினும் குறித்த தேரர் மீதான தாக்குதலை நடாத்தியவர்கள் பற்றிய தகவல்கள்
வெளியாகவில்லை
0 comments:
Post a Comment