• Latest News

    September 17, 2013

    நவநீதன்பிள்ளை இலங்கை தொடர்பான அறிக்கையை 25ஆம் திகதி சமர்ப்பிக்கின்றார்!

    ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
    ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 24ஆவது கூட்டத்தொடரில் எதிர்வரும் 25ஆம் திகதி நவநீதன்பிள்ளை இந்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
    நவநீதன்பிள்ளை அம்மையாளர் கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து களநிலவரங்களை நேரடியாகச் சென்று ஆய்வு செய்திருந்தார்.
    இதற்கமையவே இலங்கை தொடர்பான அறிக்கையை அவர் தயாரித்து ஜெனீவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நவநீதன்பிள்ளை இலங்கை தொடர்பான அறிக்கையை 25ஆம் திகதி சமர்ப்பிக்கின்றார்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top