• Latest News

    September 19, 2013

    ஆளுநரை வெளியேற்றுவதற்கு மூன்றில் இரண்டைத் தாருங்கள்

    வட மாகாண  ஆளு­ந­ருக்கு   எதி­ராக    நம்­பிக்­கை­யில்லாத்   தீர்­மானம் கொண்டுவந்து   அவரை    வெளி­யேற்­ற­  வேண்­டு­மானால்    தமிழ்த்   தேசியக்   கூட்­ட­மைப்­புக்கு மூன்றில்   இரண்டு    பெரும்­பான்­மை­யுடன் அதி­காரம்   வேண்டும். அந்த வகையில்  30 ஆச­னங்­களை    பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு    அனைத்து    வாக்­கா­ளர்­களும்  தவ­றாது    தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளிக்­க­வேண்டும் என்று கூட்­ட­மைப்பின்   முத­ல­மைச்சர்    வேட்­பாளர் சி.வி. விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
    சமஷ்டி  என்­பது  பிரி­வி­னை­வாதம் அல்ல. பிரி­வி­னை­வாதம் அல்­லாத ஒன்றை அர­சாங்­கமும்  பெரும்­பான்மைச் சமூ­கமும் பெளத்த பிக்­கு­களும் ஏன் அவ்­வாறு கூறு­கின்­றனர் என்­பது தெரி­யா­துள்­ளது   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்­த­வ­ரையில்  1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்­க­வினால்  முன்­மொ­ழி­யப்­பட்ட  அதே சமஷ்டி முறை­மை­யையே எமது  தரப்புத் தீர்­வாக முன்­வைத்­தி­ருக்­கின்றோம் என்றும் அவர் கூறினார்.

    தமிழ்த் தேசியக்  கூட்­ட­மைப்பின்   இறுதித் தேர்தல்  பிர­சாரக் கூட்டம்   நேற்று பருத்­தித்­துறை  கடற்­கரை  மைதா­னத்தில்  இடம்­பெற்­றது. பருத்­தித்­துறை  நக­ர­சபைத் தலைவர் சபா. ரவீந்­திரன் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
    இக்­கூட்­டத்தில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ. சுமந்­திரன்  அப்­பாத்­துரை  விநா­ய­க­மூர்த்தி   ஈஸ்வரபாதம்  சர­வ­ண­பவன் வேட்­பாளர் தர்­ம­லிங்கம் சித்­தார்த்தன் உட்­பட வேட்­பா­ளர்­களும் கலந்­து­கொண்­டனர். இஙகு விக்கி­னேஸ்­வரன் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்
    தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள தேர்தல் விஞ்­ஞா­பனம் தொடர்பில் தற்­போது பல­வாறு பேசப்­ப­டு­கின்­றது. நீதி­மன்­றத்­திலும் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. எனினும் அந்த வழக்கு தற்­போது ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
    குறித்த விஞ்­ஞா­ப­ன­மா­னது பிரி­வி­னை­வா­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் நடை­பெ­ற­வி­ருக்­கின்ற பொது­ந­ல­வாய நாடு­களின் மாநாட்டின் பின்னர் இது குறித்து நட­வ­டிக்கை எடுக்­க­வி­ருக்­கின்­ற­னரோ என்­பது குறித்து நான­றியேன்.
    நான்  பிரி­வி­னைக்கு வழி­வ­குப்­ப­தாக பெரும்­பான்­மை­யினர் கூறு­கின்­றனர். சமஷ்டி என்­பது பிரி­வினை என்றே கூறு­கின்­றனர். ஆனால் 1926 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்­டா­ர­நா­யக்க பல்­க­லை­யி­லி­ருந்து வெளி­யாகி இலங்கை  வந்­ததும்  இங்கு சமஷ்டி முறை ஒன்றே தேவை­யா­னது என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.
    எனினும் அன்­றைய கால­கட்­டத்தில்  தமிழ் மக்கள் இந்த சமஷ்டி முறை­மைக்கு  எதிர்ப்­பினை வெளி­யிட்­டனர். ஏனெனில்   நாடு முழு­வதும் பரந்து வாழ்ந்த தமிழ் மக்கள் சமஷ்டி முறைமை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டால் சக­லரும் வடக்­குக்கு சென்­று­வி­ட­வேண்டும் என்ற அச்­சத்­தி­னா­லேயே அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்­தனர்.
    இதன் பின்னர் 1956 ஆம் ஆண்டு பண்­டா­ர­நா­யக்­க­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட   சிங்­களம் மட்டும் சட்­டத்­தின்­போது அவர் சமஷ்டி குறித்து  எதுவும் பேச­வில்லை. இதன்  பின்னர்  தந்தை– செல்வா ஒப்­பந்தம்  மற்றும் டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகி­யவை கிழித்­தெ­றி­யப்­பட்­டன. அதன் பின்னர் ஆயுதப் போராட்டம் உரு­வா­னது. தற்­போது ஆயுதப் போராட்டம் மெள­னிக்­கப்­பட்­டி­ருக்கும் நிலை­யி­லேயே முன்னர் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்த சமஷ்டி முறையை கோரி­யுள்ளோம்.
    அர­சாங்­கமும் பெரும்­பான்மை சமூ­கத்­தி­னரும் பெளத்த பிக்­கு­மாரும் கூறு­வ­தைப்­போன்று சமஷ்டி என்­பது பிரி­வினை அல்ல. இவர்கள் ஏன் இவ்­வாறு கூறு­கின்­றனர் என்று எமக்குப் புரி­ய­வில்லை. எம்மைப் பொறுத்­த­வரை நாம் சமஷ்டி என்­ற­தொரு தீர்­வினை முன்­வைத்­துள்ளோம். இது தவறு என்றால் அர­சாங்­கத்­திடம் இருக்­கின்ற தீர்­வினை முன்­வைக்­க­வேண்டும். ஆனால் அவ்­வாறு எதுவும் கூறப்­ப­டு­வ­தாக இல்லை.
    அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யி­னரை சுற்றிச் சுற்­றியே இருக்­க­வேண்டும் என நினைக்­கின்­றது. முன்னாள் ஜனா­தி­பதி டி.பி. விஜே­துங்க மற்றும் முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா ஆகி­யோரும் இத்­த­கைய கருத்­தி­னையே முன் வைத்­துள்­ளனர்.
    தமிழ் மக்கள் தமக்­கான  ஆட்­சி­யினை அமைத்­துக்­கொள்ள   எந்த உரித்தும்   இல்லை என்­பதும் சமஷ்டி என்று கூறு­வதால் அவர்கள்  பிரிந்து போக நினைக்­கின்­றார்கள் என்று கூறு­வ­துமே அர­சாங்­கத்தின் கருத்­தாக இருக்­கின்­றது. வடக்கு கிழக்கில்  தாம் சொல்­வ­தை ப்­போன்று  தமி­ழர்கள் நடக்­க­வேண்டும் என்­ப­தே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாக இருக்­கி­ன­றது.
    இவ்­வா­றான  நிலை­யில்தான்   நாம் எமது தரப்பு   தீர்­வினை முன்­வைக்­கும்­போது அதனை   பயங்­க­ர­வாதம்  என்று கூறு­கின்­றனர். எமக்கு  என்ன   தேவை என்­ப­தனை  நாம்தான்   தீர்­மா­னிக்­க­வேண்டும். தமிழ் மக்­களின் ஆசைகள் அபிலாஷைகள் என்ன என்­ப­தனை  நாம் சக­ல­ருக்கும்  எடுத்­துக்­கூ­ற­வேண்­டு­மானால்  வட மாகா­ணத்தைச் சேர்ந்த  அனைத்து  வாக்­கா­ளர்­களும்  வரும் 21 ஆம் திகதி இடம்­பெ­ற­வி­ருக்­கின்ற வாக்­க­ளிப்பில் பங்­கேற்­க­வேண்டும்.
    வயது முதிர்ந்­த­வர்கள் பெண்கள் இளை­ஞர்கள் என வாக்­கு­ரிமை உள்ள சகலரும் வாக்களிப்பது அவசியமாகும் என்றார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஆளுநரை வெளியேற்றுவதற்கு மூன்றில் இரண்டைத் தாருங்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top