• Latest News

    October 11, 2013

    சகோதரருக்கு அமைச்சு பதவி வழங்காமையால் சுரேஸ் எம்.பி. குழப்பம் ஏற்படுத்துகிறார்: சி.வி

    நாடாளுமன்ற  உறுப்பினர் சுரேஸ்  பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால்   பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்' என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

    வட மாகாணசபைக்கு தெரிவான அமைச்சர்கள் இன்று வெள்ளிக்கிழமை (11) வட மாகாண  ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

    யாழ்ப்பாணத்தில்  அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில்  வைத்தே இந்த நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில்  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டார்.
    வடமாகாண அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள  பிரச்சினை குறித்து இந்நிகழ்வில்  கலந்துகொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த முதலமைச்சர் 'நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தனது  சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்.

    இது எல்லா கட்சிகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினையே. இதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்' என்று கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சகோதரருக்கு அமைச்சு பதவி வழங்காமையால் சுரேஸ் எம்.பி. குழப்பம் ஏற்படுத்துகிறார்: சி.வி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top