• Latest News

    December 23, 2013

    கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் ஒத்தி வைப்பு! குழப்பம்!!

    இன்று பி.ப 02.30மணியளவில் கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நடைபெற இருந்தது. இதில் கல்முனை மாநகர சபைக்கான 2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட இருந்தது.
    ஆயினும், இன்று பி.ப 2.00மணிக்கு பின்னர் இன்றைய அமர்வு எதிர்வரும் 31.12.2013 அன்றைக்கு நடைபெறுவதற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என உறுப்பினர்களுக்கு மாநகர சபையினால் அறிவிக்கப்பட்டது. இதனால், அங்கு கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் சிராஸ் மீராசாஹிவு மற்றும் மு.காவின் உறுப்பினர்களான பிர்தௌஸ், நிஸார்தீன்,அமீர், த.தே.கூவின் உறுப்பினர்கள் அமீர்தலிங்கம், விஜயரெத்னம், கமலதாசன், ஜெயகுமார், ஐதேவின் உறுப்பினர் நபார், அ.இ.ம.காவின் உறுப்பினர் முபீத் ஆகியோர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தார்கள்.
    இதனை தொடர்ந்து அங்கு கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டன. உறுப்பினர்களில் சிலர் தங்களின் கைகளில் இருந்த காகிதங்களை வீசி எறிந்தார்கள்.

     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்முனை மாநகர சபையின் வரவு-செலவு திட்டம் ஒத்தி வைப்பு! குழப்பம்!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top