எஸ்.அஷ்ரப்கான்;
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்த்மருது பிரதேசம் கொங்கிறீட் காடாக
மாறிவருகிறது. இதனால் இப்பிரதேசம் பாரிய உஷ்னப்பிரதேசமாக மாறுவதை உணரக்கூடியதாக உள்ளது டாக்டர் எஸ்.நஜிமுடீன் தெரிவித்தார்.
அல்-அமானா நற்பணி மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த நிறைவு நிகழ்வு (2014-06-08)சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் மன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.பரீட் தலைமையில் இடம்பெற்றது.இங்கு கௌரவ அதிதிகளுள் ஒருவராக கலந்துகொண்ட இவர் தொடரந்தும் அங்கு உரையாற்றும்போது,
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்த்மருது பிரதேசம் கொங்கிறீட் காடாக
மாறிவருகிறது. இதனால் இப்பிரதேசம் பாரிய உஷ்னப்பிரதேசமாக மாறுவதை உணரக்கூடியதாக உள்ளது டாக்டர் எஸ்.நஜிமுடீன் தெரிவித்தார்.
அல்-அமானா நற்பணி மன்றத்தின் ஒன்பதாவது வருடாந்த நிறைவு நிகழ்வு (2014-06-08)சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் மன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.பரீட் தலைமையில் இடம்பெற்றது.இங்கு கௌரவ அதிதிகளுள் ஒருவராக கலந்துகொண்ட இவர் தொடரந்தும் அங்கு உரையாற்றும்போது,
இப்போது மக்கள் தொகையும் அதிகரித்துச் செல்கின்றன. அத்துடன்
திட்டமிடப்படாத அபிவிருத்திகளும் எமக்கு முன்னுள்ள பாரிய சவாலாக
மாறிவருகிறது.
கடந்த 2004ல் இடம்பெற்ற சுனாமி கடல் பேரலைகளின் காரணமாக பிரதான வீதியில் இருந்து ஒரு கிலோமீட்டராக இருந்த மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிய எல்லை 750 மீற்றருக்கும் குறைந்து விட்டது தங்களது வாழ்வாதாரம் சாய்ந்தமருது பிரதேசத்தை அண்டியதாக இருப்பதால் மக்கள் இப்பிரதேசத்திலேயே வாழ விரும்புகின்றனர். இதனால் மரம் செடி கொடிகள் காணப்பட்ட இடங்கள் எல்லாம் மாடிக்கு மேல் மாடியாக கொங்கிரீட் கட்டிடங்கள் முளைத்துக்கொண்டிருக்கின்றன
கட்டிடங்கள் பெருகியுள்ளதால் நாங்கள் சுவாசிப்பதற்கு சிறந்த காற்றை
பெறமுடிவதில்லை அத்துடன் மக்களின் கழிவுகள் நிலத்தில் செலுத்தப்படுவதால் நிலமும் மாசடைந்துவருகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு ஒன்றை பெற வேண்டியது அவசரமானதும் அவசியமானதுமாக இருக்கின்றது.
இப்பிராந்திய மக்களின் நிலத்தட்டுப்பட்டை நிவர்த்திப்பதில் கல்முனை அபிவிருத்திகுழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் பங்கு மிகமுக்கியமானது.
அதிக விலை கொடுத்து காணிகளை வாங்க முடியாமல் தங்களிடமுள்ள இளம் பெண் பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்க முடியாது ஏழைப்பட்ட மக்கள் திண்டாடுகிறார்கள். இவ்வாறான பிரச்சினைகளில் இருந்து விடுபட சாய்ந்தமருது கல்முனைக்குடி போன்ற பிரதேசங்களின் மேற்கே சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெற் செய்கைக்கு உதவாத காணிகளை அவர்களாகவே மூடி அந்நிலங்களில் சிறு வீடுகளையும் மேட்டு பயிர் செய்கைகளையும் மேற்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் இதனோடு சம்மந்தப்பட்டவர்களும் கஷ்ட்டப்படும் இம்மக்களுக்காக உதவ முன்வர வேண்டும்.
அவசரமாக சாய்ந்தமருது கல்முனைக்குடி மக்களின் காணிப்பிரட்சினை தீர்க்கப்பாடாது இழுத்தடிக்கப்ப்படுமாக இருந்தால் இப்பிராந்தியம் கொங்கிரீட் காடாக மாறி இங்கு வாழும் மக்கள் நோயினாலும் மீண்டுமொரு சுனாமி மீதமுள்ள எங்களையும் காவு கொண்டு விடுமோ என்ற மன நோயினாலும் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்

0 comments:
Post a Comment