• Latest News

    September 02, 2016

    பொத்துவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி - பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராகவும் கோசம்

    பொத்துவிலில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றது. பொத்துவில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர்  ஜும்ஆப்பள்ளிவாசல் முன்ரலில் ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி பொத்துவில் பிரதேச செயலகம் வரை நடைபெற்றது. பொத்துவில் சோளக்குளத்தை தனியாருக்கு பங்கீடு செய்வதனைக் கண்டித்தும், குளத்தை புனரமைப்பு செய்ய வேண்டுமென்று கோாியும்,  பொத்துவில் கோமாாி, கிரான் ஆகிய இடங்களில் உள்ள காணிகளை பொத்துவில் பிரதேச மக்களுக்கே வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியே ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
    இதே வேளை, தமது பிரதேச காணியை அபகாித்து வேறு பிரதேசத்தவர்களுக்கு வழங்குவதற்கு அம்பாரை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முயற்சிகளை எடுப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தொிவித்தார்கள். குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், சுலோகங்களும் காணப்பட்டன.
    பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம்.முஸரப்பிடம் மகஜர் ஒன்றினையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையளித்தார்கள்.












    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொத்துவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி - பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராகவும் கோசம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top