பி.எம்.எம்.ஏ.காதர்: மருதமுனை மர்ஹூம் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ்.பி. பவுண்டேஷன் ஏற்பாடு செய்த 5வது வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று (05-07-2014) மருதமுனை அல்-மதினா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. எஸ்.பி. பவுண்டேஷன் தலைவர் எச்.எல் நஜிமுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில்;; அல்-ஹாபில் மௌலவி ஏ.ஆர்;.பைசால் கியாஸ் (பலாஹி) விஷேட சொற்பொழிவாற்றி மர்ஹூம் டாக்டர் எச்.எல்.ஜமால்தீன் எஸ.;;எஸ்.பி. அவர்களுக்கு விஷேட துஆ பிரார்த்தனையும் செய்தார். இந்த இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.எல்.அப்துல்மனாப், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு நிர்மான அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகான சபை உறுப்பினர்களான எம்.இராஜேஸ்வரன்,ஏ.எல.;தவம், கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாகத், கல்முனை பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.ஹப்பார். கல்முனை வலயக்;கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், ஹாதி நீதிபதி என்.எம்.இஸ்மாயில், மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள,; சட்டத்தரணிகள், கல்வி அதிகாரிகள்,அதிபர்கள்.ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.
July 05, 2014
- Blogger Comments
- Facebook Comments
Subscribe to:
Post Comments (Atom)







0 comments:
Post a Comment