"ஈராக்கிற்கு
திரும்பிச்செல்லும் பேச்சுக்கே இடமில்லை. எங்கள் உயிரை மீண்டும் பணயம் வைக்க நாங்கள்
தயாராக இல்லை. விமானம் மூலம் கொச்சி விமான நிலையம் வந்தடைந்த கேரளத்தைச் சேர்ந்த சாண்ட்ரா
செபாஸ்டின் இவ்வாறு தெரிவித்துள்ளார்
ஈராக்கில்
சிக்கித் தவித்த
இந்திய நர்ஸ்கள்
46 பேர் பத்திரமாக
தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.
இந்நிலையில்
ஏர் இந்தியா
விமானம் மூலம்
கொச்சி விமான
நிலையம் வந்தடைந்த
கேரளத்தைச் சேர்ந்த சாண்ட்ரா செபாஸ்டின் கூறுகையில்:
"ஈராக்கிற்கு திரும்பிச்செல்லும் பேச்சுக்கே இடமில்லை. எங்கள் உயிரை
மீண்டும் பணயம்
வைக்க நாங்கள்
தயாராக இல்லை.என்று தெரிவித்துள்ளார்.
கடந்த
ஆண்டு ஆகஸ்ட்
மாதம் 16-ஆம்
திகதிதான் ஈராக்
சென்றேன். திக்ரித்
அரசு பயிற்சி
மருத்துவமனையில் பணியாற்றிய எனக்கு கடந்த 4 மாதங்களாகவே
ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை.
அந்த
மருத்துவமனையில் நாங்கள் 23 பேர் மட்டுமே இருந்த
நிலையில் கடந்த
பெப்ரவரி மாதம்
எங்களுடன் மேலும்
15 பேர் சேர்ந்து
கொண்டனர்.
திக்ரித்
நகர் போராளிகள்
பிடியில் சென்ற
பிறகு அந்த
மருத்துவமனையில் சிக்கியிருந்த நாட்களில், பலமுறை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்
எங்களை வெளியேறுமாறு
மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் இந்திய
தூதரகம் அந்த
இடத்தை விட்டு
வெளியே செல்லக்கூடாது
என தெரிவித்திருந்ததால்
நாங்கள் வெளியேறவில்லை.
ஆனால், 3-ஆம்
திகதி எங்களை
சுற்றிவளைத்த போராளிகள் 15 நிமிடத்தில் நாங்கள் இருக்கும்
இடத்தில் இருந்து
வெளியேற வேண்டும்
என நிர்பந்தப்படுத்தினர்.
நர்ஸ்
ஒருவரின் தந்தை பாலகிருஷ்ணன் கூறுகையில்:
என் மகள்
ரேணு கடந்த
ஆகஸ்டில் தான்
ஈராக் சென்றாள்.
அவளை அங்கு
அனுப்பி வைக்க ( இந்திய ரூபாய்களில் ) 2 லட்சம் ரூபாய்
கடனாக பெற்றேன்.
ஆனால் கடந்த
3 மாதங்களாக அவளால் பணம் அனுப்ப முடியவில்லை
என வேதனையுடன்
தெரிவித்தார்.
கோட்டயத்தைச்
சேர்ந்த மெரீனா
11 மாதங்களுக்கு பின்னர் தன் மகள் ரியாவையும்,
மகன் மெரினையும்
கட்டித் தழுவினார்.
பின்னர் செய்தியாளர்களிடம்
பேசிய அவர்,
இந்தியா
திரும்பியுள்ள 46 நர்ஸ்களில் 45 பேர் கேரள மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள். ஒருவர் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தைச்
சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment