• Latest News

    November 16, 2014

    அர்ஜூன போட்டியிட்டாலும் எமது ஆதரவு ஜனாதிபதிக்கே: ரணதுங்க சகோதரர்கள்

    அர்ஜூன ரணதுங்க அல்ல எவர் போட்டியிட்டாலும் தனது ஆதரவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கே என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ருவான் ரணதுங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில்,

    ஜனாதிபதியின் தலைமையில் நாடு பெற்றுள்ள வெற்றியை மறுபக்க திருப்ப எனது சகோதரர் அல்ல எவர் போட்டியிட்டாலும் அதற்கு இடமளிக்க போவதில்லை.

    இதனால், எமது தந்தையான ரெஜி ரணதுங்கவை நேசிக்கும் அவருக்காக உழைத்த மக்களிடம் இந்த உறுதிமொழியை வழங்குகிறோம்.

    மக்கள் எனது தேர்தல்களை விட மிகவும் கஷ்டப்பட்டு ஜனாதிபதியை வெற்றி பெற செய்ய வேண்டும் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

    அதேவேளை ருவான் ரணதுங்க தெரிவிக்கையில்,

    சில காலங்களில் எமது அரசாங்கமே எம்மை விமர்சித்தது. எனினும் எமது தந்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்லவில்லை. நாங்கள் அந்த தந்தையின் பிள்ளைகள்.

    தண்ணீரை விட இரத்தம் கனமானது. எனினும் கட்சியையும் தந்தையையும் காட்டிக்கொடுக்க மாட்டோம்.

    தந்தை கற்பித்த மக்கள் சேவையை முன்னெடுத்துச் செல்ல சில நேரங்களில் நான் அரசாங்கத்துடன் சண்டையிடுவேன்.

    இந்த பிரச்சினைகளால் கடந்த காலங்களில் இரவில் எனக்கு நித்திரையும் வரவில்லை. எனக்கு மாத்திரமல்ல எமது குடும்பத்தினரும் நித்திரை கெட்டது என ருவான் ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அர்ஜூன போட்டியிட்டாலும் எமது ஆதரவு ஜனாதிபதிக்கே: ரணதுங்க சகோதரர்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top