• Latest News

    December 30, 2014

    12 லட்சம் மாணவர்களை ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக அணி திரட்டுவேன்!- உபுல் சாந்த சன்னஸ்கல

    12 லட்சம் மாணவர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக அணி திரட்டப் போவதாக பிரபல தனியார் வகுப்பு ஆசிரியரும், கலைஞருமான உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.

    என்னிடம் கல்வி பயின்ற 12 லட்சம் மாணவர்களை அணி திரட்டி ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிக்கச் செய்வேன்.

    சியம்பலாண்டுவ பிரதேசத்தில் உள்ள மிருகங்களைக் கொண்டு மக்களை ஆட்சி செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது.

    இவ்வாறான ஓர் நாட்டில் வாழ்வது பொருத்தமற்றது.

    இந்திய கலைஞர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை தங்க வைத்து,  இலங்கை கலைஞர்கள் நியாயத்திற்காக குரல் கொடுக்கும் போது தாக்குதல்களை நடத்துவது எந்த வகையில் நியாயமானது.

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக குரல் கொடுக்கும் கலைஞர்களிடம் இந்தக் கேள்வியை எழுப்புகின்றேன்.

    என்னிடம் பயின்ற மாணவர்களிடம்ää ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு கோருகின்றேன் என உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.

    கோட்டே சொலிஸ் அரங்கில் புதிய தலைமுறை கலைஞர்களினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்
    TW -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 12 லட்சம் மாணவர்களை ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதிராக அணி திரட்டுவேன்!- உபுல் சாந்த சன்னஸ்கல Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top